மங்கையர் மலர்

உனக்கு என்ன காது செவிடா?

வி.ரேவதி

"பதிலுக்கு பதில் பேசினாத்தான் பொண்டாட்டி சண்டைக்கு வரான்னு கம்முனு இருந்து பார்த்தேன்...!"

"அடடா, அப்புறம்..?"

"கேட்கக் கேட்க கம்முனு இருக்கியே, உனக்கு காது செவிடா?' ன்னு கேட்டு வம்பு வளர்க்கிறா!"

*****************

"எனக்கு கடன் வாங்கவும் பிடிக்காது, கொடுக்கவும் பிடிக்காது! உனக்கு...?"

"வாங்கினா, கொடுக்கப் பிடிக்காது!"

*****************

மானேஜர் : "இந்த ஃபைல்ல என்னப்பா மல்லிகைப்பூ வாடை வீசுது?"

பியூன் : "ஸ்டெனோ மேடம் தலைக்கு வச்சு படுத்திருந்தாங்க சார்!"

*****************

"வியாதி, முழுவதும் குணமான பிறகுதான் எங்க டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணுவார்.!"

"எங்க டாக்டர் அப்படி இல்லே ; கையில பணம் தீர்ந்ததுமே அனுப்பி விட்டுடுவார்!"

*****************

"புருசனுக்கு கட்டுப்பட்டு, மாமனார் - மாமியாரை மதிச்சு, வீட்டு வேலைகளை திறம்பட செய்யக் கூடிய அழகான, வசதியான பொண்ணா இருந்தா சொல்லுங்க தரகரே....?"

"ம்ம்ம்… இருந்தா சொல்றேன் சார்....!"

*****************

"ஆணுக்கு எதிரி ஆண் தான்னு சொல்றியே, எப்படி?"

"ஆண்களுக்கு பெரும்பாலும் தரகர் மூலம்தானே கல்யாணம் நடக்குது!"

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT