செய்திகள்

மெக்சிகோவில் 8 பேரைக் கொலை செய்த 14 வயது சிறுவன் கைது!

கார்த்திகா வாசுதேவன்

மெக்ஸிகோ நகரத்துக்கு அருகே போதைப்பொருள் தொடர்பான 8 பேரைக் கொன்றதற்காக "எல் சாபிடோ" என்ற புனைப்பெயர் கொண்ட 14 வயது சிறுவனை மெக்சிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சிறுவன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று குறைந்த வருமானம் கொண்ட மெக்ஸிகோ நகரத்தின் புறநகர்ப் பகுதியான சிமல்ஹுவாகனில் ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 22 கொலைகளை நடத்திய மற்றொரு சிறுவனும் கைது செய்யப்பட்டான், மேலும் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் இதே விதமாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல் சாபிடோ மற்றும் அவனது குழுவைச் சார்ந்த நண்பர்கள் தாக்குதலில் ஈடுபட்ட போது அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் விருந்து நடத்திக் கொண்டிருந்தனர், அது ஒரு பிறந்த நாள் பார்ட்டியாக இருக்க வாய்ப்பு உண்டு. இதில் ஐந்து பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்திய சிறுவனின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் அவனது புனைப்பெயர் - "லிட்டில் சாப்போ" - என சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் உலகின் பிரபுவான ஜோவாகின் "எல் சாப்போ" குஸ்மானின் வெளிப்படையான குறிப்பு சுட்டிக் காட்டுகிறது.

கொலைகளின் நோக்கம் பகிரங்கப்படுத்தப்படவில்லை, ஆனால் மெக்ஸிகோவில் போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி கடத்தல் மற்றும் ஒப்பந்த கொலைகளில் ஈடுபடுகின்றன. அவர்கள் தங்கள் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்கும் போட்டியாளர்களையும் அல்லது அவர்களுக்கு பணம் கொடுப்பவர்களையும் கொன்று விடுகிறார்கள்.

குழந்தை கொலையாளிகள் மெக்ஸிகோவுக்குப் புதிதல்ல...

2010 ஆம் ஆண்டில், "எல் பொன்சிஸ்" என்ற 14 வயது சிறுவனைப் போதைப் பொருள் தடுப்புப் படையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கும் போது, அவன் பகிர்ந்து கொண்ட உண்மை அதிர வைத்தது. 11 வயதில் கடத்தப்பட்டதாகக் கூறும் அவன், , பிளவுபட்ட பெல்ட்ரான் லீவா கும்பலின் ஒரு கிளையான தென் பசிபிக் கார்டெல் நிறுவனத்தில் பணிபுரிய கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறான். அப்படி அந்த கேங்குக்காக அவன் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட போது குறைந்தது நான்கு தலை துண்டிப்பு குற்றத்தில் பங்கேற்றதாகக்

கூறி இருக்கிறான். கைது செய்யப்பட்ட பிறகு, தனது முதல் பெயரான எட்கரால் மட்டுமே அடையாளம் காணப்பட்ட அச்சிறுவன், தனக்கு அந்த கேங்கைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கொடுத்து குற்றங்களைச் செய்ய அச்சுறுத்தியதாக செய்தியாளர்களிடம் கூறினான்.

வியாழனன்று, வடக்கு எல்லை மாநிலமான சோனோராவில் உள்ள வழக்கறிஞர்கள், எல்லை நகரமான மெக்ஸிகாலியில் ஒன்பது கொலைகளுடன் தொடர்புடைய ஒரு பெண்ணைக் கைது செய்ததாகக் கூறினர்.

அந்த பெண்ணுக்கு இரண்டு கொலைகளுக்கு நிலுவையில் உள்ள வாரண்டுகள் இருப்பதாகவும், ஆனால் ஏழு கொலை விசாரணைகளில் அவர் பெயரிடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் கூறியது. அந்த கொலைக்கான சாத்தியமான நோக்கங்கள் என்ன என்பதை அலுவலகம் தெரிவிக்கவில்லை.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT