சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் 
செய்திகள்

என்னது சுட்டெரிக்கும் கோடையில் திடீர் மழையா?

கல்கி டெஸ்க்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் திடீரென ஏற்பட்ட வானிலை மற்றம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மழை

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, 27.03.2023 மற்றும் 28.03.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.03.2023 முதல் 31.03.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அரசின் 'சாப்பிடச் சரியான வளாகம்' சான்றிதழ்!

வெற்றிக்கு வழிகாட்டும் தோல்வியின் இலக்கணங்கள்!

திடீரென சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்... எவ்வளவு தெரியுமா?

வசூலில் சாதனை படைக்கும் 'ஸ்டார்' படம்... 4 நாளில் இத்தனை கோடியா?

விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..! எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT