CervicalCancer
CervicalCancer 
செய்திகள்

9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

நாட்டில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பள்ளிகள் அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் 2024 உரையில் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.

2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,”நோய்த்தடுப்பு திட்டத்தில் மனித பாப்பிலோமா வைரஸுக்கு (human papilloma virus) (எச்.பி.வி) தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி போடுவதை நமது அரசாங்கம் ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக தகுதியுள்ள அனைத்து சிறுமிகளையும் உள்ளடக்கியது. 9 வயதில் பெண்களுக்கான வழக்கமான தடுப்பூசியின் ஒரு பகுதியாக தடுப்பூசி பின்னர் செலுத்தப்படும். இந்த பிரசாரமானது செர்வாவாக் எனப்படும் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்தும். லான்செட் ஆய்வில் இது உலகளாவிய தடுப்பூசிகளைப் போலவே பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

9 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுமிகளும் அடுத்த 3 ஆண்டுகளில் தங்கள் பள்ளிகள் அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகளைப் பெறுவார்கள். சுகாதார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவை இந்த பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள்.

நாடு முழுவதும் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 கோடி குழந்தைகள் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள். 3 ஆண்டுகளாகப் பிரித்தால், முதல் ஆண்டில் குறைந்தபட்சம் 2.6 கோடி குழந்தைகள் தடுப்பூசி பெற தகுதி பெறுவார்கள். இந்த 2.6 கோடி குழந்தைகளைத் தவிர, ஏற்கெனவே பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள இடங்களில் 9 வயதாக இருக்கும் மேலும் 50 லட்சம் முதல் 1 கோடி குழந்தைகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் தடுப்பூசி டோஸ் தேவைப்படும் என்றார்.

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT