Confession of the woman 
செய்திகள்

இறந்து 11 நிமிடத்தில் உயிர்த்தெழுந்த பெண்ணின் வாக்குமூலம்! 

கிரி கணபதி

இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது மனித குலத்தின் நீண்ட கால கேள்வி. பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை வெவ்வேறு வழிகளில் விளக்குகின்றன. இந்தக் கேள்விக்கு விடை தேடும் மனிதனின் ஆர்வம், மரணத்தை நெருங்கிச் சென்றவர்களின் அனுபவங்கள் மூலம் எப்போதும் தூண்டப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 68 வயதான ‘சார்லோட் ஹோம்ஸ்’ என்ற பெண்ணின் அனுபவம், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய புது புரிதலை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு, ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது, சார்லோட்டின் ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து, ஒரு கட்டத்தில் அவர் சுயநினைவை இழந்தார். மருத்துவர்கள் அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நம்பிக்கை இழந்துவிட்டனர். 

ஆனால் அதிசயமாக, சார்லோட் 11 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்றார். மீண்ட பிறகு அவர் கூறியவை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. அவர் சுயநினைவின்றி இருந்த காலத்தில், சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்ததாகக் கூறினார். மேலும் தேவதைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நரகத்தின் பயங்கரமான காட்சிகளை அவர் தனது அனுபவத்தில் விவரித்தார். 

மரம், செடி, கொடிகள் இசைக்கு ஏற்றவாறு அசைவதையும், அவை கடவுளை வணங்குவதையும் தான் பார்த்ததாக அவர் கூறினார். அவளது தாய், தந்தை, சகோதரி உட்பட இறந்த அன்புக்குரியவர்கள் அனைவரும் அவளை வாழ்த்தினார்களாம். குறிப்பாக, அவர்கள் அங்கு நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாகத் தோன்றினர் என அவர் விவரித்தார்.

சார்லோட்டின் இந்த அனுபவம், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய நம்பிக்கைகளை அதிகரித்துள்ளது. பலர் இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி பேசியுள்ளனர். இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு NRI, 7 நிமிடங்கள் சுயநினைவின்றி இருந்தபோது  நிகழ்வுகளை அனுபவித்ததாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த அனுபவங்கள் மனிதனின் ஆன்மா அழியாதது என்பதற்கும், மறுபிறப்பு உண்டு என்பதற்கும் உள்ள நம்பிக்கைகளை வலுப்படுத்துகின்றன. இந்து மதம் போன்ற பல மதங்களில் ஆன்மாவின் அழியாமை மற்றும் மறுபிறப்பு பற்றிய கருத்துக்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால், அறிவியல் ரீதியாக இவற்றை நிரூபிக்க முடியவில்லை.

சார்லோட்டின் அனுபவம் போன்றவை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய விவாதத்தை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளன. ஆனால், இவை அனைத்தும் தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமே. இவற்றை வைத்து ஒரு பொதுவான முடிவுக்கு வர முடியாது. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய உண்மையான விடை இன்னும் தெரியவில்லை. எனவே, இந்த விவாதம் தொடர்ந்து நீடிக்கும் என்பதே உண்மை.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT