Deadly virus discovered by Chinese scientists 
செய்திகள்

சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொடிய வைரஸ்… 3 நாட்களில் மரணம் நிச்சயம்! 

கிரி கணபதி

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூன்றே நாட்களில் உயிரை எடுக்கக்கூடிய கொடிய வைரஸை கண்டுபிடித்துள்ளனர். இது உலக மக்களை அச்சமடையைச் செய்துள்ளது. 

சீனாவின் பிரபலமான ஹெபெய் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் Ebola வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதுவகை வைரஸை உருவாக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க நோய் தொடர்பான ஆய்வுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூன்றே நாட்களில் உயிரை பறிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டது என்பதால், ஒருவேளை கொரோனா வைரஸ் போல தெரியாமல் உலகில் பரவிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே உலக நாடுகளை அச்சுறுத்தி இலட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த கொரோனா வைரஸ், சீனாவில் இருந்தே வெளியானது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இப்போது இந்த புதிய வைரஸை அவர்கள் உருவாக்கியுள்ளது, உலக மக்களுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையலாம் என கூறப்படுகிறது. இந்த வைரஸை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைக்கோ புரோட்டினைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வைரஸானது மனித செல்களை பாதித்து விரைவாக மனித உடல் முழுவதும் பரவும் தன்மை கொண்டது. 

எபோலா வைரஸ் நோயாளிகளுக்கு ஏற்படுவது போலவே, இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான உறுப்பு செயலிழப்புகளை சந்திப்பார்கள். இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட சில எலிகளின் கண் இமைகள் முற்றிலுமாக சேதமாகி, இறுதியில் அவற்றின் கண்பார்வை முழுவதும் பறிபோய்விட்டது. இந்த ஆய்வானது முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸ் வெளியே வராமல் இருக்க பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸ் இதுபோன்ற ஆய்வகத்தில் இருந்து தான் பரவியதாக குற்றச்சாட்டு இழந்து வரும் நிலையில், ஒருவேளை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் தெரியாத்தனமாக வெளியே பரவத் தொடங்கினால் உலகம் கொரோனா வைரஸை விட கொடூரமான அழிவை சந்திக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

உலக மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் தேவையா? WHO ஏன் இதுபோன்ற ஆராய்ச்சிகளை தடுக்கவில்லை? என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT