பெண் சோப்தார் லலிதா
பெண் சோப்தார் லலிதா 
செய்திகள்

மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதல் பெண் சோப்தார் நியமனம்!

கல்கி டெஸ்க்

மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண் நீதிபதிகளுக்கான ‘சோப்தாராக’ (செங்கோல் ஏந்தி செல்பவர்) செயல்படுவார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண்‘சோப்தாராக’ திலானி என்பவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதன் முதலாக பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப் பட்டுள்ளார். இவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மாலாவுக்கான சோப்தாராக  பணியில் நியமிக்கப் பட்டுள்ளார்.  மதுரையை சேர்ந்த பட்டதாரியான லலிதா, தனக்கு இந்த சோப்தார் பணி மிகவும் பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இணையத்தில் உள்ள AI Web Browsers என்னென்ன தெரியுமா? அவற்றின் பலன்களைப் பார்ப்போமா?

மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

SCROLL FOR NEXT