செய்திகள்

தமிழ்நாடு அரசின் பிணையப் பத்திரங்கள் விற்பனை!

கல்கி டெஸ்க்

மிழ்நாடு அரசு பத்து ஆண்டுகால மற்றும் இருபது ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பது குறித்து, தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு மொத்தம் 4000 கோடி ரூபாய் மதிப்பில், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

தலைமைச் செயலகம்

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் ஜூலை 4ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. போட்டி ஏலக் கேட்புகள் அன்று 10,30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜுலை 4, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று அந்த நிதித் துறை அறிவிப்பில் கோரப்பட்டு இருக்கிறது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT