செய்திகள்

BSNL 4ஜி, 5ஜி சேவைகளை வலுப்படுத்த நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கல்கி டெஸ்க்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் - ன் 4 ஜி, 5 ஜி சேவைகளை வலுப்படுத்த நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களின் கடுமையான போட்டியால் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த போட்டி நிறுவனங்கள் அழைப்புகள் மற்றும் 4ஜி டேட்டா சேவைகளை குறைந்த விலையில் வழங்கி வருகின்றன.

 கடனில் சிக்கியுள்ள எம்டிஎன்எல் நிறுவனத்தை மூட அரசு ஆலோசித்து வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்தின் ஊழியர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற்ற திட்டமிடப் பட்டது. இதனால் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் பங்குகள் கிட்டத்தட்ட 12% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

prime minister narendra modi

போட்டி நிறுவனங்கள் அதிவேக 5 ஜி நெட்வொர்க்கை வெளியிட்டு வரும் நிலையில், மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உடன் சேர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம், நாடு முழுவதும் 4 ஜி நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த முயற்சியை தொடர்ந்து பிஎஸ்என்எல் - ன் 4 ஜி, 5 ஜி சேவைகளை வலுப்படுத்த ரூ. 89,000 /- கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொலை தொடர்பு துறையின் முக்கியத்துவம் கருதி, பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT