செய்திகள்

மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தர் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் போராடலாம்: டெல்லி காவல்துறை!

கார்த்திகா வாசுதேவன்

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் உள்ளிருப்பு போரட்டத்தை டெல்லி காவல்துறை அகற்றிய ஒரு முழு நாளுக்குப் பிறகு, டெல்லியில் அந்த ஒரு இடத்தைத் தவிர வேறு பொருத்தமான எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவர்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என பாதுகாப்புப் படை திங்கள்கிழமை கூறியது.

"ஜந்தர் மந்தரில் அறிவிக்கப்பட்ட இடத்தில் மல்யுத்த வீரர்களின் ஆர்ப்பாட்டம் சுமூகமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை, போராட்டக்காரர்கள் பலமுறை எங்கள் கோரிக்கைகளைப் புறக்கணித்து சட்டத்தை மீறினர். எனவே, நாங்கள் அந்த தளத்திலிருந்து அவர்களை முற்றிலுமாக அகற்றி தர்ணாவை முடித்தோம்," என்று காவல்துறை துணை ஆணையர் (புதிய) டெல்லி) இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

"எதிர்காலத்தில் மல்யுத்த வீரர்கள் தங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மீண்டும் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தால், நகரத்தில் ஜந்தர் மந்தரைத் தவிர வேறு எந்த பொருத்தமான அறிவிக்கப்பட்ட இடத்திலும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள்" என்று மேலும் அந்த ட்வீட் தெரிவித்தது.

மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா மற்றும் பிற எதிர்ப்பாளர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை கலவரம் மற்றும் கடமையை செய்ய இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .

டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரங்கனைகள் மற்றும் வீரர்களின் ஒரு மாத கால நீண்ட உள்ளிருப்புப் போராட்டத்தின் இடத்தை அகற்றியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அவர்கள் அங்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தலைநகர் முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மூன்று மல்யுத்த வீரர்கள் உட்பட 109 போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் தடுத்து வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் விவரித்த டெல்லி போலீஸ் பிஆர்ஓ சுமன் நல்வா, போலீஸ் படை போராட்டக்காரர்களுடன் ஒத்துழைத்து வருகிறது, ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் அவர்களை தீவிர நடவடிக்கை எடுத்து போராட்ட இடத்தை அகற்ற கட்டாயப்படுத்தியது.

-என்று கூறினார்.

"கடந்த 38 நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், நாங்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அவர்களுக்கு தண்ணீர் மற்றும் ஜெனரேட்டர் பெட்டிகளை வழங்குகிறோம். அவர்களுக்கு நுழைவு மற்றும் வெளியேறும் இலவசமாக அளிக்கப்பட்டு உள்ளது," என்று அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் மே 17 ஆம் தேதி அணிவகுப்பு நடத்துவதற்கு மல்யுத்த வீரர்கள் அனுமதி கோரியதாகவும், மே 23 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியதாகவும், தெரிவித்த டெல்லி காவல்துறை அவர்களது நேற்றைய போராட்டத்தை மட்டும் சட்டம் ஒழுங்குக்கு எதிரானது என அடையாளப்படுத்தி ஆதாரங்களுடன் முழு மனதாக போராட்டக்காரர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றியதாகக் காவல்துறை உயரத்காரி ஒருவர் தெரிவித்தார்.

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT