மனநிம்மதிக்கு உலகை சுற்றிப் பார்க்க செல்வோம். அப்படி செல்லும்போதுதான் தெரியும், தாயின் மடியே உலகம் என்று!
அவ்வப்போது வந்து செல்லும் அன்பிற்கு நடுவில், தாயின் அன்பு மட்டும் அசராமல் இருக்கிறது!
காதலிக்க நேரமில்லை! ஏனெனில், அவள் காதலில் நான்! அவள் என்றால் என் காதலி அல்ல, என் அம்மா!
இருப்பவன் தொலைப்பதும் இழந்தவன் தேடுவதும் தாயின் அன்பையே!
அன்பின் முழு வடிவத்தை தினமும் நான் பார்க்கிறேன் என் அன்னையிடம்!
அவள் மானிட விடிவோ! இறைவடிவோ! எதுவாயினும்
அவளுக்கு இணை எவரும் இல்லை.
அவளின்றி எதுவும் இல்லை!
தாய்க்கிணை தாயே!