ஸ்பெஷல்

12 எம்.எல்.ஏ-க்கள் மாயம்: மகாராஷ்டிர அரசியல் மர்மம்!

கல்கி

மகாராஷ்டிராவில் ஆளும்கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த 1 அமைச்சர் உட்பட 12 எம்எல்ஏக்கள் திடீரென மாயமானதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர்கள் 5 பேர், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சார்பாக தலா 2 பேர், காங்கிரஸ் 1 என்ற  கணக்கில் வெற்றி பெற்றனர். இதில் சிவசேனாவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித் திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் ஆளும்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்.எல்.ஏக்கள் இன்று காலை முதல் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மாயமான அந்த 12 பேரும் குஜராத்திலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT