சென்னை வடக்கு காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி ஐ.பி.எஸ். நேற்று நள்ளிரவு தனியாக சைக்கிளில் சென்று இரவுநேர ரோந்துப் பணி மேற்கொண்டது பாராட்டு பெற்றுள்ளது.
நேற்றிரவு ரம்யா பாரதி ஐபிஎஸ் சென்னையில் நள்ளிரவில் சேப்பாக்கம் வாலாஜா சாலையில் தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார் .
கோட்டை காவல் நிலையம் , எஸ்பிளனேட் , பூக்கடை காவல் நிலையம் , யானைக்கவுனி காவல் நிலையம் , வண்ணாரப்பேட்டை , ஆர் . கே நகர் , புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் , தண்டையார்பேட்டை ஆகிய 8 காவல் நிலையங்களுக்கு சென்று இரவு நேர பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இப்பகுதிகளில் இரவு நேர ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். நள்ளிரவு 2:45 மணியில் தொடங்கி விடியற்காலை 4.30 மணி வரை வடக்கு மண்டல பகுதிகள் மற்றும் காவல் நிலையங்களை ரம்யா பாரதி ஆய்வு செய்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரம்யா பாரதி ஐபிஎஸ்-சின் இந்த செயலுக்கு காவல்துறை உயர்அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.