மடகாஸ்கர் தீவின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் புறப்பட்ட ஒரு கப்பல், பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி கடலில் கவிழ்ந்தது. இதில் 17 பேர் இறந்தனர்.
68 பேரை காணவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், கப்பலிலிருந்து 25 பேரை மீட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியுடன், காணாமல் போன பகப்பல் பயணிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கப்பல் கவிழ்ந்தது குறித்து விசாரணையில் வெளியான தகவல்:
கப்பலின் உட்பகுதியில் தண்ணீர் புகுந்து அதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்லது. மேலும் சரக்குகளை கொண்டு செல்லக்கூடிய கப்பலில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.