ஸ்பெஷல்

குடியரசு தின விழா; தமிழக காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்!

கல்கி

நம் நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக காவல் அதிகாரி .டி.ஜி.பி. வெங்கடராமன் மற்றும் சி.பி.சி..டி. காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 18 காவல்துறை அதிகாரிகளுக்கு மெச்சத்தகுந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு;

* திருச்சி மத்திய மண்டலம் .ஜி. வி.பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார், கோவை மேற்கு மண்டல .ஜி. ஆர்.சுதாகர், சென்னை ..ஜி.சவரணன், கியூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள், சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சுரேந்திரநாத், கியூ பிரிவு சி..டி. ஆய்வாளர் கே.அண்ணாத்துரை, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டர் கார்த்திகேயன், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சி..டி. கூடுதல் எஸ்.பி. தாமஸ் பிரபாகரன், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன், உளவுப்பிரிவு உதவி ஆணையர் முருகவேள், கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. முரளிதரன், கடலூர் லஞ்சஒழிப்பு காவல் ஆய்வாளர் சண்முகம், கோவை போக்குவரத்து திட்டமிடல் கூடுதல் துணை ஆணையர் இளங்கோவன், ஆகியோருக்கு பெச்சத் தகுந்த பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தந்திரங்கள்! 

ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கைக்குத் தேவையான 6 யுக்திகள்!

இந்தியாவின் பாரம்பரிய புடவை கட்டும் முறைகள்!

SCROLL FOR NEXT