Sanju samson and Rishab Pant 
விளையாட்டு

பயிற்சியில் சஞ்சு சாம்சன்… ரிஷப் பண்டின் நிலை என்ன?

பாரதி

இலங்கை அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. இந்த போட்டிக்காக சஞ்சு சாம்சன் பயிற்சி செய்து வருவதால், ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியின் புது பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து யார் யார் அணியில் இடம்பெறுவார் என்பதில் குழப்பம் ஏற்பட்டே வருகிறது. அவருக்கு உதவியாக அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடர்கிறார். இவர் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு அளித்த ஃபீல்டிங் பயிற்சியில் பலரும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், வீரர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றனர்.

எப்போதும் இறுக்கமான முகத்துடனே இருக்கும் கவுதம் கம்பீர், அந்த கொண்டாட்டத்தைப் பார்த்ததும் சிரிக்க ஆரம்பித்தார்.

அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதையும் கவனிக்க முடிந்தது. இதனால், அவருக்கும் நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பர் 3ல் களமிறங்கிய ரிஷப் பண்ட், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், உல்டாவாக சஞ்சு சாம்சன் பயிற்சி செய்து வருவதால், ரிஷப் பண்ட் பெஞ்சில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் திறமைக்கு ஏற்ப அவரை விளையாடவைப்பது இல்லை என்று கவுதம் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இவரே பயிற்சியாளராக மாறியதும், சஞ்சுவை இறக்கவுள்ளார் என்று தெரிகிறது.

இதனால், ரிஷப் பண்ட் ஓரங்கட்டப்படுவார் என்றே சொல்லப்படுகிறது. மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு சஞ்சு சாம்சன் ஃபார்மில் உள்ளார். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என்று எந்த பேட்டிங் வரிசையிலும் சஞ்சு சாம்சன் விளையாடக் கூடியவராக உள்ளார். இதனால், கம்பீரின் திட்டம் வெற்றியில் முடியும் என்றே கிரிக்கெட் வட்டாரத்தினர் கணிக்கின்றனர்.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT