Diabetes 
ஆரோக்கியம்

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு... சீன விஞ்ஞானிகள் அசத்தல்! 

கிரி கணபதி

உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த நோய், இன்று லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சைமுறை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய விடியலைத் தந்துள்ளது.‌ 

அரை மணி நேர அறுவை சிகிச்சை: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 25 வயது பெண் சர்க்கரை நோயாளிக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையானது, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு தசை எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த அரை மணி நேரம் அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இனி இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த புதிய சிகிச்சைமுறை குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால், இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த புதிய சிகிச்சையின் மூலம் இன்சுலின் தேவை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படும். 

சீன மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. 

சீன மருத்துவ ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை நோய் சிகிச்சை முறையானது சீனாவின் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால், சீன மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்பப்படுகிறது.‌ 

சீன மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த சிகிச்சை முறையை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் எளிதாக அணுகும் வகையில் செய்ய வேண்டியது அவசியமாகும். 

இந்த பூச்சிகளை மட்டும் சீண்டி பார்க்காதீர்கள்!

News 5 – (03.10.2024) 'தளபதி 69' படத்தில் நடிகை பிரியாமணி!

கோவிலிலும் வீட்டிலும் நுழைவாயிலைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். என் தெரியுமா?

போலி SBI கிளையை திறந்த மோசடி கும்பல்!

புரட்டாசி மாதத்தில் துளசியை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்!

SCROLL FOR NEXT