தேங்காய்பூ https://canadamirror.com
ஆரோக்கியம்

இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்பூ!

ஆர்.ஜெயலட்சுமி

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயின் முதிர்ச்சி நிலையே ஆகும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கிறது. தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் பூவை சாப்பிடுவதால் தைராய்டு பிரச்னையை குணப்படுத்தலாம். தேங்காய் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். இதில் குறைந்த அளவு கலோரி உள்ளதால் உடல் எடை குறைய உதவுகிறது. தேங்காய் பூ வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் உடலில் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் செல்களை தூண்டுகிற ஃப்ரீரேடிகல்களை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது தேங்காய் பூ. தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் உள்ளன. தேங்காய் பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கிறது. தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த முடிகிறது.

ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தேங்காய் பூ சிறந்த மருத்துவம் ஆகும். இதில் உள்ள வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலை சீராக்குகிறது. தேங்காய் பூவில் முதுமையை தடுக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைய உள்ளது. இது முதுமை நம்மை நெருங்க விடாமல் தடுக்கிறது. சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய் பூவுக்கு உண்டு. இதய வால்வுகளில் படிகின்ற கொழுப்புகளை கரைத்து உடலில் கொழுப்புகள் தேங்காமல் பாதுகாக்கிறது.

இதயம் தொடர்பான மற்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய்ப் பூ. மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் தேங்காய் பூவுக்கு உண்டு. தேங்காய் பூ சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கிறது. அதோடு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய் பூவில் கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், சர்க்கரை கொழுப்பு லாரிக் அமிலம் என பல சத்துக்கள் நிரம்பி உள்ளன.

நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் அபரிதமாக தேங்காய் பூவில் உள்ளன. நீர்ச்சத்துக்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது. தேங்காய் பூக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் சேராது.

தேங்காய் பூவில் காப்பர், இரும்புச் சத்து, தாமிரம் போன்றவை அதிகம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கையை கூட்டுகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகமாகக் கிடைக்க வழி செய்கிறது. கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் பெண்களும் தேங்காய் பூக்களை சாப்பிடும் போது கர்ப்பப்பையில் உள்ள கழிவுகள் நீங்குகிறத, தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்கிறது.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT