Essential nutrients for the body 
ஆரோக்கியம்

உடலுக்கு இந்த 5 சத்துக்கள் ஏன் மிகவும் அவசியம் தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

டல் ஆரோக்கியத்திற்கு தேவையானது பல்வேறு சத்துக்கள் அடங்கிய உணவுகள். எந்தெந்த சத்துக்கள் எதில் அதிகம் இருக்கிறது. அதை சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

புரதம்: மூங்கில் அரிசியானது அரிசி மற்றும் கோதுமையை விட அதிகம் புரதம் கொண்டது.  தங்க சம்பா அரிசியிலும் அதிக அளவு புரோட்டின்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன .நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல்நிலை மேம்படுத்துவதற்கு, ஆயுளை அதிகரிக்க , சோம்பலை தடுக்கவும் இவ்வரிசி உயர்ந்தது.

பூசணி விதை, கொண்டைக்கடலை, பாதாம் பருப்பு, சாமை, யோகர்ட், வேர்க்கடலை, பாலாடைக்கட்டி, பீனட் பட்டர், டுனா எனப்படும் மீனினம், ஓட்ஸ், முட்டை ஆகியவற்றில் அதிக புரதம் இருக்கிறது. புரதச் சத்தானது உடலில் நோய்த் தொற்றை எதிர்க்க உதவும் வெள்ளை அணுக்கள் உருவாக்கப் பயன்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதம் முக்கியமான ஊட்டச்சத்தாக விளங்குகிறது. செல்களை உருவாக்கவும் நோய் தொற்றை எதிர்த்து போராடவும், முக்கிய உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லவும் உதவுகிறது. மேலும் இரும்பு, துத்தநாகம் வைட்டமின் பி, டி, கால்சியம் மற்றும் செலினியம் போன்ற குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவையான ஊட்டச்சத்துக்களும் புரதத்தில் உள்ளன. குழந்தைகள் தினமும் இரண்டு முதல் மூன்று முறை புரத உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகளவு புரதம் தேவைப்படுவதாக கூறுகிறார்கள்.

பருவ வயதில் புரதச்சத்து மிகவும் அவசியம். டீன் ஏஜ் பெண்கள் தினமும் 50 கிராம் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் .தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை அல்லது காராமணி போன்றவற்றை வேக வைத்து சாப்பிடலாம் .தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தயிர் இல்லாத பாயசம் சாப்பிடலாம் .சோயா உணவுகள் கடலை மற்றும் பாதாம் முந்திரி வகைகளை சாப்பிடலாம்.

அயோடின் சத்து: அயோடின் கலந்த உப்பை தினமும் பயன்படுத்த வேண்டும். இச்சத்து அனைத்து காய்கறிகளிலும் உள்ளது. குழந்தைகளின் முழுமையான உணர்ச்சிக்கு உதவும். கழுத்து கழலை நோய் வராமல் தடுக்கவும் தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்கவும் அயோடின் சத்து தேவைப்படுகிறது.

கொழுப்புச் சத்து: இரத்தம், தசை நார்களை வலுப்படுத்துவது இதன் வேலை.  உடல் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் உயிர் சத்துக்கள் கரைய உதவும். கிச்சிலி சம்பா அரிசி, வெண்ணெய், நெய், ஈரல், எண்ணெய் வித்துக்கள், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறையும். அதனால் முடிந்த வரை எண்ணையில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

இரும்புச்சத்து: இரத்த சோகை வராமல் தடுப்பது ,உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது , இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுவது இதன் வேலை. கருங்குருவை, பூங்கார் அரிசி, சுண்டைக்காய், கீரைகள் ,முழு தானியங்கள், பேரிச்சை, வெள்ளை சர்க்கரை,புளி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது.

தினமும் ஏதேனும் ஒரு கீரை வகையை 100 கிராம் சாப்பிடலாம். சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி, பால் குடிக்கலாம். உலர்ந்த திராட்சை மற்றும் பேரிச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகமாகும். முளைக்கட்டிய பயறு மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

கால்சியம்: எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கால்சியம் சத்து குறைவால் எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்துவிடும். தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது அவசியம். வாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். ராகி, எள் போன்றவற்றில் கால்சியம் நிறைய இருக்கின்றது.

ஆதலால், அடிக்கடி மேற்குறிப்பிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் அதில் கிடைத்து விடும். இதனால் தங்கு தடையின்றி வேலைகளை செய்து சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சிறுகதை: இருட்டை மீறி திமிறிய உருவம்!

SCROLL FOR NEXT