Presbyopia 
ஆரோக்கியம்

முதுமையில் அணியும் மூக்குக் கண்ணாடிக்கு இனி நோ சொல்லலாமே.!

மணிமேகலை பெரியசாமி

வயசாகிப் போச்சு; கண்ணு தெரியல; நாலு எழுத்த கூட்டி படிக்க முடியல; என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிக்கடி சொல்வதைப் கேட்டிருப்போம்.

வயதானதற்கு முதல் அறிகுறியாக, கண் தன் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அதாவது நமக்கு பார்வை மங்காத் தொடங்கும்.  இதற்கு மூப்புப் பார்வை (Presbyopia) என்று பெயர். நரைக்கும் முடி, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களோடு சேர்த்து மூப்புப் பார்வையும் முதுமையின் ஆரம்ப நிலையை நமக்கு காட்டும் ஓர் இயற்கையான செயல்பாடு; குறைபாடு. இந்த குறைபாடு நாற்பது வயதில் தொடங்கி, அறுபது வயதில் தீவிரமடைகிறது.

மூப்புப் பார்வையின் முதல் அறிகுறியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மங்கலான வெளிச்சத்தில் படிப்பதற்கு சிரமமாக இருக்கும். அருகில் உள்ள பொருள்களில் கவனம் செலுத்துவதற்கு கடினமாக இருக்கும். கடினமான வேலை செய்தாலோ அல்லது கண்களுக்கு அதிக நேரம் வேலை கொடுத்தாலோ தலைவலி, கண்களில் களைப்பு ஏற்படும். 

மூப்புப் பார்வையைச் சரிசெய்ய, இரண்டு வழிகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஒன்று கண்ணாடி அணிவது. மற்றொன்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது. இதில், பெரும்பாலானேர் காண்ணாடி அணிவதைத் தேர்ந்தெடுப்பார்கள்.

சிலருக்கு, கண்ணாடி அணிவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சிலருக்கு கண்ணாடி அணிய அசௌகரிகமாக இருக்கும். அறுவைசிகிச்சை செய்து கொள்ளவும் விருப்பமிருக்காது.

ஆனால், இனி மூப்புப் பார்வையினால் பாதிக்கப்பட்டவர்கள், மூக்குக் காண்ணாடிகளுடன் அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு சொட்டு மருந்து மூலமாக மூப்புப் பார்வையால் ஏற்படும் சிரமத்தில் இருந்து விடுபடலாம்.

ஆம், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (India's Drug Regulatory Agency) , presbyopia சிகிச்சைக்காக, PresVu கண் சொட்டு மருந்துகளை அங்கீகரித்துள்ளது, இந்தச் சொட்டினை பயன்படுத்தினாலே போதும், நாளடைவில் கண்ணாடி அணிய வேண்டியத் தேவை இருக்காது.  மூப்புப் பார்வைக்காக, இத்தியாவில் கண்டுபிக்கப்பட்ட முதல் கண் சொட்டு மருந்து இதுவே.

இந்த கண் சொட்டுகள் மேம்பட்ட டைனமிக் பஃபர் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. வருகின்ற அக்டோபர் மாதம், முதல் வாரத்தில் இருந்து மருந்துச் சீட்டு அடிப்படையிலான (prescription based) இந்த கண் சொட்டு மருந்து மருந்தகங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.350. மூப்புப் பார்வையால் பாதிக்கப்பட்ட  நாற்பது முதல் அறுபது வயதுடையவர்கள் இந்த கண் சொட்டு மருந்தினை மருத்துவரின் பரிந்துரையின்படி வாங்கிப் பயன்படுத்தலாம்.

'இந்த சொட்டுகளை நீண்ட காலத்திற்குப்  பயன்படுத்த முடியும்; காண்ணாடிக்கு ஆகும் செலவை விட மிகக் குறைவான செலவே ஆகும்' என்பது இதன் சிறப்பம்சமாக உள்ளது. 

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT