Earache
Earache 
ஆரோக்கியம்

கடுமையான காது வலி தீர சில வீட்டு வைத்தியம்!

பி.பாரதி
  • கடுமையான காது வலியின் போது, காதுகளில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை விட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

  • வெற்றிலையை சாறு பிழிந்து ஒரு சில சொட்டுகளை வலியுள்ள காதுகளில் விட்டால் காது வலி குறையும்.

  • கடும் காது வலியின் போது இரண்டு சொட்டுகள் துளசிச் சாற்றை காதில் விட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

  • காதில் கடுமையான வலி ஏற்படும் போதெல்லாம், ஹீட்டிங் பேட் அல்லது ஹாட் வாட்டர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். சுமார் அரை மணி நேரம் இப்படி செய்தால், காதைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வதால், வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • பெருங்காயத்தை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக காதில் சில துளிகளை விட காது வலி குறையும்.

  • உப்பை சூடு செய்யவும். வெது வெதுபான பதத்தை அடைந்தவுடன் பஞ்சை அதில் முக்கி எடுக்கவும். இதைக் காதில் 10 நிமிடத்திற்கு வைத்தால் ஈரப்பதத்தை உரிஞ்சி காதில் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

  • நல்லெண்ணெயில் நான்கு பற்கள் பூண்டு போட்டு காய்ச்சி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், இரண்டு சொட்டுகள் காதில் விட்டால், காது வலி பறந்து விடும்.

  • வெதுவெதுப்பாக காய்ச்சிய கடுகு எண்ணெயை இரண்டு சொட்டுகள் காதில் விட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  • எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து வடிகட்டி அதன் சொட்டுகளை காதுகளில் விட வலி குறையும்.

  • திருநீற்று பச்சிலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை எடுத்து இரண்டு அல்லது மூன்று துளிகள் வலி உள்ள காதுகளில் விட்டால் வலி நிச்சயமாக குறையும்.

  • நல்லெண்ணெயில் கிராம்பு கலந்து கொதிக்க வைத்து, ஆறிய பின் வடிகட்டி இரண்டு சொட்டுகள் காதில் விட்டால் காது வலி பறந்து விடும்.

  • காதில் ஆப்பிள் சைடர் வினிகர் நனைத்த பஞ்சைக் கொண்டு அடைத்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வளருவதை அடியோடு அழிக்கலாம். வலியும் குறையும்.

  • காது வலி தொடர்ச்சியாக இருந்து வந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் காது நரம்புகள், மூளை நரம்புகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT