ஆரோக்கியம்

மனச்சோர்வை நீக்கி மூளைக்குப் புத்துணர்ச்சி தரும் மஞ்சள்!

எஸ்.விஜயலட்சுமி

ந்திய சமையலில் மஞ்சளைத் தவிர்த்து எந்த உணவையும் தயார் செய்ய முடியாது. மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது: மஞ்சளில் குர்க்குமின் எனப்படும் உயிர்சக்தி வாய்ந்த இயற்கை சேர்மம் உள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. அதனால் இதய நோய் அபாயத்தை மஞ்சள் குறைக்கிறது.

செரிமான மேம்பாடு: செரிமானக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெற மஞ்சள் உதவுகிறது. உணவில் தினமும் மஞ்சள் சேர்த்து வரும்போது குடல் இயக்கம் மற்றும் செரிமானம் நன்றாக நடைபெறும். மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

இருமலை சரி செய்யும்: பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் சுவாசத் தொற்றுகள் சரியாகும். மற்றும் கல்லீரல் நோய்கள் குணமாகும். இருமல், சளியை சரி செய்யும்.

மனச்சோர்வை குறைக்கும்: மஞ்சளில் உள்ள குர்க்குமின் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். மஞ்சள் மூளை தொடர்பான நோய்களை தடுக்கும். அல்சைமர்ஸ் நோயை தாமதப்படுத்தி நல்ல நினைவாற்றலை அளிக்கும். இதில் உள்ள டர்மரோன் என்கிற வேதிப்பொருள் அல்சைமர்சை தடுக்க உதவும். புதிய மூளை செல்களை உருவாக்க உதவும். மேலும், ஸ்டெம் செல்களை தூண்ட உதவுகிறது. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மூட்டு வலியை குறைக்கிறது: மஞ்சள் மூட்டு வலியை குறைக்கிறது. மூட்டுகளில் வீக்கம், வலி போன்றவற்றுக்கு மஞ்சள் நல்ல மருந்தாக விளங்குகிறது. தினமும் உணவில் மஞ்சள் சேர்த்து வந்தால் மூட்டு வலி வருவதைத் தள்ளிப் போடலாம்.

புற்றுநோயை தடுக்கிறது: மஞ்சளில் உள்ள குர்க்குமின் புற்றுநோய் செல்களை அழிக்கிறது, குடல் புற்று நோய்க்கு மஞ்சள் நல்ல மருந்தாக இருக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகளில் ஒன்றாக மஞ்சள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தியை கொண்டிருக்கின்றன.

அழகியல் பண்பு: மஞ்சளை தினமும் முகத்தில் தடவி குளித்து வந்தால் முகப்பருவை தடுக்கும். மேலும், வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையான தோற்றத்தை அளிக்கிறது. சருமத்தை இறுக்கமாகவும் சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்கிறது: உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் தங்கள் உணவில் தவறாமல் மஞ்சளை எடுத்து வந்தால் அவர்களுக்கு படிப்படியாக உடல் எடை குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சிலருக்கு மஞ்சள் அலர்ஜி இருக்கலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மஞ்சளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய நற்பண்புகளைக் கொண்ட மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வருவது அவசியம். மஞ்சள் சமையலில் உபயோகப்படுவதோடு, ஒரு முக்கியமான மங்கலப் பொருளாகும். இந்தியாவில் எல்லா சுப காரியங்களிலும் மஞ்சள் முக்கிய மற்றும் முதல்  இடம் பெற்று விளங்குகிறது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT