Get complete information about leukemia! Image Credits: Daily Express
ஆரோக்கியம்

இரத்தப் புற்றுநோயின் வகைகளும் சிகிச்சை முறைகளும்!

நான்சி மலர்

புற்றுநோயில் மொத்தம் 200 வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை செய்யப்படும். புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால், சரிசெய்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்தப் பதிவில் இரத்தப் புற்றுநோய் குறித்துப் பார்ப்போம்.

இரத்தப்புற்று நோய் எலும்பினுடைய மஜ்ஜையிலிருந்தே தோன்றுகிறது. ஏனெனில், அங்கிருந்து தன் இரத்த அணுக்கள் தோன்றுகிறது. இங்கிருந்து உருவாகும் மாறுப்பட்ட இரத்த அணுக்கள், சாதாரண இரத்த அணுக்களின் வேலைகளை உடலில் செய்யவிடாமல் தடுக்கிறது. இரத்தப் புற்றுநோயில் மூன்று வகையிருக்கிறது. leukaemia, lymphoma, Myeloma ஆகியவையாகும். Leukaemia என்பது இரத்தத்தையும், எலும்பு மஜ்ஜைகளையும் வெகுவாக பாதிக்கிறது. Lymphoma என்பது ஒருவருடைய நிணநீர் மண்டலத்தை பாதிக்கிறது. Myeloma என்பது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களை வெகுவாக பாதிக்கிறது.

சில வகை இரத்தப்புற்று நோய் குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தைகளுக்கான மற்றும் பெரியவர்களுக்கான சிகிச்சை முறைகள் வேறுபட்டிருக்கும். அக்யூட் லிம்போப்லஸ்டிக் லுக்கிமியா என்பது குழந்தைகளிடம் பரவலாக வரக்கூடியது. குரோனிக் லிம்போசைட்டிக் லுக்கிமியா என்பது பெரியவர்களுக்கு வரக்கூடியது.

இரத்தப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் எடை குறைதல், கட்டிகள் உருவாவது, மூச்சுத் திணறல், வியர்த்தல், களைப்பு, ஜுரம் ஆகியவையாகும். இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த chemo theraphy, targeted therapies, immuno theraphy, radio theraphy, stem cell transplants போன்ற தெரப்பிகள் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிந்துவிட்டால், ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது. இரத்தப் புற்றுநோய் வந்துவிட்டால் உடனேயே இறப்பு என்று அர்த்தமில்லை. ஆனால், உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிடக்கூடும். இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் டெக்னாலஜியின் வளர்ச்சியின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்நாளை நீட்டித்துக்கொள்வதோடு புற்றுநோயையும் குணப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தப் புற்றுநோய் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக உருவாவதால், அதனை நாம் வரும் முன்னரே தடுத்துவிட முடியாது. அதேசமயம், சில வேதிப்பொருட்கள் அல்லது கதிரியக்கங்களில் அதிகளவு உட்படும்போது இரத்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆகையால், அவற்றிலிருந்து தள்ளியிருப்பது சிறந்தது.

எனவே, இரத்தப்புற்றுநோய் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் விரைவாக நல்ல மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஆரம்பக் காலத்திலேயே இரத்தப்புற்றுநோயை கண்டுப்பிடிப்பதன் மூலம் அதை குணமாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT