Problems caused by workload! 
ஆரோக்கியம்

வேலை பளுவால் இவ்வளவு பிரச்சனை வருமா? 

கிரி கணபதி

இன்றைய நவீன உலகில் வேலை பளு என்பது பெரும்பாலான தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, உலகமயமாக்கல் போன்ற காரணங்களால், மக்கள் அதிக மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.‌ இந்த அதிகப்படியான வேலை பளு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பதிவில் வேலை பளு சார்ந்த தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.‌ 

வேலை பளு காரணமாக பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். அதில் முதலாவது உடல்நல பாதிப்பு. தூக்கமின்மை, தலைவலி, செரிமானக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் வேலை பளுவால் ஏற்படலாம். தொடர்ச்சியான வேலை அழுத்தம் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

பலர் தங்களின் வேலைக்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி இருப்பதால், குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைந்து உறவுகள் பாதிக்கப்படும். அதிக வேலை பளு காரணமாக புதிய திறன்களை கற்றுக்கொள்ளவோ, படைப்பாற்றலுடன் செயல்படவோ முடியாமல் போகலாம். இதனால், தொழில் வாழ்க்கை முன்னேற்றம் தடைபடும். அதிக நேரம் வேலை மட்டுமே செய்து கொண்டிருப்பதால், நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்புகொள்ளும் நேரம் குறைந்து, தனிமை உணர்வு ஏற்படக்கூடும். 

தீர்வுகள்: 

வேலை பளுவைக் குறைப்பதற்கு ஒவ்வொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல், அவ்வப்போது இடைவெளி எடுத்து உடலையும், மனதையும் தளர்த்திக் கொள்ள வேண்டும். 

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைத்து உங்களது ஆற்றலை அதிகரிக்க உதவும். வேலை நேரத்திற்குப் பிறகு உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியாக இருக்கலாம். இத்துடன் ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். 

வேலைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் குடும்பம், நண்பர்கள் பொழுதுபோக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி உங்களது வேலையை எளிமைப்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதால், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் மேம்பட்டு, எந்த சூழ்நிலையிலும் தைரியமாக இருக்க முடியும். 

இன்றைய காலத்தில் வேலை பளு என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனை என்றாலும், சரியான திட்டமிடல், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம், அதை நிர்வகிக்க முடியும். எனவே, உங்களுக்கு ஏற்ற வழிகளைக் கண்டுபிடித்து வேலை பளுவால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முற்படுங்கள். 

பலாக்கொட்டை உடலுக்குத் தரும் நன்மைகளும் தீமைகளும்!

உலகின் மிக சிறிய 'புடு' மான் ஈன்ற குட்டிமான்!

‘ஆல் இன் ஒன்’ பெற்றோராகத் திகழ்வது எப்படி தெரியுமா?

திருப்பதி லட்டு வாங்க இனி திருப்பதிக்கு செல்ல வேண்டாம்! 

Soap Vs Body Wash: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

SCROLL FOR NEXT