"காசு இருந்தால் என்னை சந்தியுங்கள்" மீட்டிங்கிற்கு விலை பேசிய இயக்குனர் 'அனுராக் காஷ்யப்'!

Anurag Kashyap
Anurag Kashyap

பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை சந்திக்க பணம் கேட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில், மிகவும் திறமையான இயக்குனராக அறியப்படுபவர் அனுராக் காஷ்யப். இயக்குனர் என்பதை தாண்டி சில படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சில நிமிட காட்சியில் தோன்றி இருந்தார்.

இப்படி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னை சந்திக்க வருபவர்கள் பணம் இருந்தால் வாங்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் உங்களுக்கு உதவ முன்வந்து... நிறைய நேரத்தை வீணடித்து வருகிறேன், இது போன்ற சந்திப்பு பெரும்பாலும் மருத்துவ மனப்பான்மையுடன் முடிகிறது. எனவே இனி நான் அறிமுகம் இல்லாதவர்களை சந்தித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இதையும் படியுங்கள்:
'இந்தியன் 2' முதல் 'தக் லைஃப்' படம் வரை... அடுத்தடுத்த அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்!
Anurag Kashyap

யாரேனும் என்னை சந்திக்க விரும்பினார் 10 முதல் 15 நிமிடங்களுக்குச் 1 லட்சம் ரூபாயையும், அரை மணி நேரத்திற்கு 2 லட்சம் மற்றும் 1 மணி நேரத்திற்கு 5 லட்சம் வசூலிக்க போகிறேன். இதை உங்களால் கொடுக்க முடியும் என்றால் என்னை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கவும் இல்லை என்றால் என்னை விட்டு விலகியே இருங்கள். சந்திப்புக்கு முன்னரே பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்னது பார்ப்பதற்கு பணம் கொடுக்கவேண்டுமா என கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றானர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com