குழந்தைகளின் குதூகலம்: வாழ்க்கையின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க ஒரு வழி!

A way to restore the joy of life
Smiling child
Published on

குழந்தைகள் உலகின் மிக அழகான படைப்புகள். அவர்கள் சிரிக்கும் முகத்தைப் பார்த்தாலே எவருக்கும் மனதில் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் எங்கு இருந்தாலும் அந்த இடம் உயிரோட்டம் பெறும், உற்சாகமாகும். அவர்களின் விளையாட்டுத்தனமான சிரிப்பு, சின்னச் சின்ன குறும்புகள், துள்ளித் தாண்டும் செயல்கள் இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘குழந்தைகளின் குதூகலம்’ என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளின் இயல்பு: ஒரு குழந்தை உலகைப் பார்க்கும் விதம் மிக எளிமையானதும் சுத்தமானதுமாகும். அவர்களுக்கு சிறிய விஷயங்களே பெரிய மகிழ்ச்சியைத் தருகின்றன. வானத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியைப் பார்த்து சிரித்தாலும், மழையில் நனைந்து விளையாடினாலும், பூங்காவில் ஊஞ்சல் ஆடினாலும் அவர்களின் முகத்தில் தெரியும் ஒளி குதூகலத்தின் பிரதிபலிப்பு. மற்ற குழந்தைகளை அணைத்து முத்தமிடும் காட்சி மனதை சிலிர்க்கச் செய்யும். இந்த சுத்தமான மனநிலையை பெரியவர்களிடம் அடிக்கடி காண முடியாது. சுற்றுப்புறத்தில் நடக்கும் அனைத்தையும் அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருக்கும். ஏன்? எப்படி? என்ற கேள்விகளை தொடர்ந்து கேட்கும் இயல்பும் அவர்களிடம் உண்டு.

இதையும் படியுங்கள்:
ஏன் சிலரால் அடுத்தவர் வெற்றியைத் தாங்க முடிவதில்லை?
A way to restore the joy of life

அவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை விளையாட்டில் கழிப்பார்கள். விளையாட்டு மூலமே அவர்கள் உலகைக் கற்றுக் கொள்கிறார்கள். தங்களிடம் அன்பு காட்டுபவர்களுடன் விரைவில் பழகி விடுவார்கள். சின்னச் சிரிப்பாலும், அணைத்துக் கொள்வதாலும் பாசத்தை வெளிப்படுத்துவார்கள். சிறு குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையில்லை. பொம்மைகளை உயிரோடு இருப்பதாக நினைத்துப் பேசுவது, கற்பனை உலகில் விளையாடுவது இயல்பான ஒன்று. மகிழ்ச்சி, சோகம், பயம் ஆகிய உணர்வுகள் மிக வேகமாக மாறி மாறி வரும். சிறிய விஷயங்களும் அவர்களை வெகுவாக பாதிக்கும். பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் ஆகியோரின் நடத்தை, பேச்சு ஆகியவற்றை விரைவாக அவர்கள் பின்பற்றுவார்கள்.

குடும்பத்தில் குழந்தைகளின் குதூகலம்: ஒரு வீட்டு சுவர்கள் சிரிப்பால் நிறைவதற்குக் காரணம் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளே. அவர்களின் சின்னச் சின்ன பேச்சுகள், சிரிப்பு சத்தங்கள், ஓடி விளையாடும் சுறுசுறுப்பு எல்லாம் பெற்றோருக்கு ஆறுதலாகும். குழந்தைகளின் குதூகலத்தைப் பார்த்தாலே பெற்றோர் தங்களின் சோர்வை மறந்து விடுவார்கள். குடும்பத்தில் உள்ள தகராறுகள் கூட குழந்தைகளின் அப்பாவி சிரிப்பால் சில நொடிகளில் மறைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
காலையில் எழுந்ததும் இந்த சின்னச்சின்ன மாற்றங்களை செய்தால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும்!
A way to restore the joy of life

சமுதாயத்தில் குழந்தைகளின் குதூகலம்: குழந்தைகளின் குதூகலம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஒரு சமுதாயத்திற்கும் உயிரூட்டும் சக்தியாகும். பள்ளிகளில் நண்பர்களுடன் விளையாடும்போது எழும் சிரிப்புகள், தெருக்களில் சைக்கிள் ஓட்டும் ஆரவாரம், விழாக்களில் ஆடம்பரமாக கலந்துகொள்வது இவை எல்லாம் சமுதாயத்தில் சந்தோஷத்தை பரப்பும். ஒரு சமூகத்தின் எதிர்காலம் அதன் குழந்தைகளின் குதூகலத்தில்தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

வாழ்க்கைப் பாடங்கள்: குழந்தைகளின் குதூகலம் பெரியவர்களுக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது. அவர்கள் அப்பாவித்தனம், சுத்தம், உண்மைத்தன்மை ஆகியவற்றைக் காட்டுகிறார்கள். சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சியை காணும் கலையை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், சிரித்து மகிழ்வதே நம்மை உயிரோட்டமுடன் வைத்திருக்கும் என்பதை அவர்கள் நினைவூட்டுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பட்டுப் புடைவை ரகசியங்கள்: உங்களுக்கு தெரியாத 5 விஷயங்கள்!
A way to restore the joy of life

குதூகலத்தை பாதுகாக்கும் கடமை: இன்றைய வேகமான உலகில், குழந்தைகளின் குதூகலத்தைப் பாதுகாப்பது மிக முக்கியம். கல்விச்சுமை, தொழில்நுட்ப அடிமைத்தனம், சுற்றுச்சூழல் பிரச்னைகள் போன்றவை அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கக் கூடாது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகள் சுதந்திரமாக சிரிக்கவும் விளையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும். குழந்தையின் குதூகலம்தான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அடிப்படை.

குழந்தைகளின் குதூகலம் என்பது இயற்கையின் அற்புதமான பரிசு. அது குடும்பத்தையும் சமுதாயத்தையும் மகிழ்ச்சியால் நிறைக்கிறது. குழந்தைகள் சிரிக்கும்போது உலகமே சிரிக்கும். அவர்களின் குதூகலத்தைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் நமது அனைவரின் கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com