பக்தனுக்கு பணிவிடைபுரிய மகளாக வந்த அம்பிகை!

Ambigai
Ambigai
Published on

520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை ஒரு மனதோடு ஜெபித்ததால், அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து, அருள்பாலித்தாள்.

அம்பிகையின் அருளால் அவர், கவிஞராக மாறினார் இவரை, 'கவிராஜ பண்டிதர்' என்றே அழைத்தனர். பல ஆண்டுகளுக்கு பின் மனைவியை இழந்த கவிராஜர், ஒரு சமயம், தன் மகள் மீனாட்சியை, தங்கையின் பொறுப்பில் விட்டு, காசிக்கு புறப்பட்டார். 

சிறிது தூரம் சென்ற பிறகு வழியில் ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தங்கினார். அப்போது, அவர் மகள் மீனாட்சி, கையில் சில பாத்திரங்களுடன் அங்கு நின்றிருந்தாள். அதிர்ந்த கவிராஜர், "நீ ஏன் என் பின்னால் வந்தாய்? காசி என்ன பக்கத்திலா இருக்கு? போயிட்டு உடனே திரும்ப எப்படியும் ஆறு மாசம் ஆகுமே..." என்றார். மகளோ, "உங்களை விட்டு நான் மட்டும் தனியா இருக்க மனசு கேக்கல. நானும் கூட வந்து, உங்களுக்கு உதவியா இருக்கேன்" என்றாள் அழுத்தமாய்!

இதையும் படியுங்கள்:
ஓலைச்சுவடியிலிருந்த திருக்குறள் புத்தகமாக வெளிவந்தது எப்படி தெரியுமா?
Ambigai

வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் கவிராஜர். போகும் வழியெல்லாம், தந்தைக்கு உணவு சமைத்து கொடுத்து, உதவியாக இருந்தாள் மீனாட்சி. பல மாதங்கள் பயணப்பட்டு இருவரும் காசியை சென்றடைந்தனர். கங்கையில் நீராடுவதும், விஸ்வநாதர் - விசாலாட்சி தரிசனமுமாக நாட்கள் போயின. 

ஒருநாள், இருவரும் கடை வீதி வழியாக சென்ற போது, தனக்கு வளையல் வாங்கிக் கொடுக்கக் கூறினாள் மீனாட்சி. கவிராஜர் வருந்தினார்; கையில் காசில்லை. என்ன செய்வது என திகைத்த போது, அங்கே தமிழ் பேசும் ஒருவர் வந்து, சிறுமி மீனாட்சிக்கு வளையல் வாங்கிக் கொடுத்து மறைந்தார். 

இருவரும், காசி தரிசனத்தை முடித்து, ஊருக்கு திரும்பினர். ஊருக்கு பக்கத்தில் , முதலில் தங்கிய மரத்தடியை அடைந்த போது, ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார் கவிராஜர். அப்போது, "அப்பா... நீங்க மெல்ல வாங்க. நான் முன்னாடி போறேன்" என்று சொல்லி, சிட்டாகப் பறந்தாள் மீனாட்சி. சிறிது நேரம் கழித்து கவிராஜர் வீட்டிற்கு வந்தார். 

கவிராஜர் வந்ததும், அவரது தங்கை, "நீ போனதுல இருந்து உன் பொண்ணு படுத்த படுக்கையாயிட்டா" என்றாள். இதைக் கேட்டதும் அதிர்ந்த கவிராஜர், "என்ன சொல்ற; மீனாட்சி என் கூட காசிக்கு வந்து, அப்பப்ப சமைச்சு போட்டா. வளையல் கூட வாங்கினாளே..." என்றார் திகைப்போடு!

இதையும் படியுங்கள்:
மாட்டு பண்ணை நடத்தி 50 லட்சம் வருமானமா? சாதிக்கும் பெண்மணிகள்!
Ambigai

தங்கையோ, "என்னண்ணா சொல்றே? மீனாட்சி இங்க தானே இருக்கா.. இதோ பார்" என்று படுத்த படுக்கையாக கிடந்த மகளை காட்டினாள். மேலும், "கொஞ்ச நேரம் முன் ஒரு சுமங்கலி பெண் வந்து, நீ குடுத்ததா சொல்லி, இந்த வளையல்களை தந்துட்டு போனாள். இதோ அந்த வளையல்" என்று காண்பித்தார்கள். 

உண்மை புரிந்த கவிராஜருக்கு, மெய் சிலிர்த்தது. தன்னோடு காசிவரை வந்தது அம்பிகைதான் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தார். கண்களில் கண்ணீர் வழிய, அம்பிகையை வணங்கினார். 

இந்த கவிராஜ பண்டிதர்தான், ஆதிசங்கரரின், சவுந்தர்யலஹரி பாடல்களை, தமிழில் மொழி பெயர்த்தவர். தற்போது பிரபலமாகி வரும், வராஹி மாலை எனும் மந்திர துதி நூலை, அருளியவர். பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com