வாயில் வெடிக்கும்... கொஞ்சம் உப்பு கரிக்கும்... தனித்துவமான சுவை... கடல் திராட்சை!

அயோடின் சத்து நிறைந்த கடல் திராட்சை நீரிழிவுநோய், கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டுள்ளது என்கின்றனர்.
Caulerpa lentillifera or sea grapes
Caulerpa lentillifera or sea grapes
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்தியப் பசிபிக் கடலோரப் பகுதியில் காணப்படும் ஒருவகை பச்சைப்பசேல் என்றிருக்கும் கடல்பாசியினையே, கடல் திராட்சை (Caulerpa lentillifera) என்கின்றனர். இதன் தாவரவியல் பெயர் 'கவுலெர்ப்பாலெண்டில்லிஃபெரா' என்பதாகும். அதன் மென்மையான, சதைப்பற்றுள்ள அமைப்பு காரணமாக, இந்தக் கடற்பாசி சாப்பிடக்கூடிய கவுலெர்ப்பா வகை இனங்களுள் ஒன்றாகும். இந்த வகைக் கடற்பாசி பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிரிடப்பட்டு சாப்பிடப்படுவதால் இது இலாட்டோ, குசோ, ஆந்திரோசெப் போன்ற பல்வேறு பெயர்களில் அங்கு பயன்பாட்டிலிருக்கும் உள்ளூர் மொழியில் அறியப்படுகிறது; மலேசிய நாட்டில் உள்ள சபா மாநிலத்தில், ‘இலாட்டோக்' என அழைக்கப்படுகிறது. ஜப்பானிலுள்ள ஒகினாவாவில் "உமி-புடோ", அதாவது "கடல் திராட்சை" என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் பச்சைக் கேவியர் அல்லது கடல் திராட்சை எனப்படுகிறது.

இது வடிகுழல் வகைப் பெரும்பாசியாகும். பெரிய உயிர்க்கலத்தில் இருந்து பல்கரு உருவாகும் பாசியாகும். இது 30 செமீ நீளத்துக்கு வளர்கிறது. இலைகள் மட்டுமன்றி, இதன் குமிழ்ப் பகுதிகள் வாயில் வெடித்து நல்ல உமாமி வகை மணத்தைத் தருகிறது. மரபாக கடல் திராட்சை காட்டுப்பயிரில் இருந்து நேரடியாக அறுவடை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பல்வேறு உடற்பிரச்னைகளுக்கு மருந்தாகும் கடல் பாசி!
Caulerpa lentillifera or sea grapes

இது முதலில் வணிகமுறையில் 1950-ம் ஆண்டுகளில் சிபுத் தீவுகளில் தற்செயலாக மீன்குட்டைகளில் அறிமுகமாகி, பயிரிடப்படலானது. இப்போது மத்திய பிலிப்பைன்சு நாட்டில் உள்ள மாக்டான் தீவு, சிபு தீவுகளில், பெரிய குளங்களில் பயிரிடப்பட்டு மிகவும் வெற்றிகரமாக சிபு, மணிலா சந்தைகளில் விற்கப்படுகிறது. சுமார் 400 எக்டேர் அளவுள்ள குளங்களில் பயிரிடப்பட்டு, ஆண்டுக்கு ஓர் எக்டருக்கு 12 முதல் 15 டன் புதிய கடற்பாசி அறுவடை செய்யப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஜப்பான், ஒக்கினாவாவில் 1968 ஆம் ஆண்டிலிருந்து வெதுப்பான நீர்த்தொட்டிகளில் வணிக முறையில் பயிரிடப்பட்டது. பிறகு வணிகமுறைப் பயிரிடல், வியட்நாம் தைவான், சீனா, பியுஜித் தீவுகள், கைனான் எனப் பல நாடுகளில் பெரும்பாலும் உள்நாட்டு நுகர்வுக்காகப் பரவியது என்றாலும் ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கவுலெர்ப்பா இலெண்டில்லிஃபெரா பொதுவாக வினிகருடன் சேர்த்து பச்சையாக, ஒரு சிற்றுண்டியாக அல்லது ஒரு சாலட்டாகச் சாப்பிடப்படுகிறது.

கடல் திராட்சை தூய நீரில் கழுவப்பட்ட பின்னர், வழக்கமாக ஒரு சாலட்டு போன்று பச்சையாகவேச் சாப்பிடப்படுகிறது. வெங்காயம், புதிய தக்காளி கலந்த கலவை மீது மீன் சாஸ் அல்லது பகூங் எனப்படும் மீன் பசைக்குழைவும், வினிகர் எனும் செயற்கைப் புளிக்காடி ஆகியவற்றால் அழகு பட விரவிச் சாப்பிடப்படுகிறது. மலேசியாவின் சபா மாநிலத்திலும் பச்சையாகக் கலந்து உண்பது மக்கள் வழக்கில் உள்ளது. இங்கு சாமா-பயாவு இனம் புலம் பெயெர்ந்ததால் இம்முறை உணவு வழக்குக்கு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வுணவு இலட்டோகு என இரியாவு த்ஹீவகம் சார்ந்த மலாய் மக்களாலும், சிங்கப்பூரிலும் வழக்கில் வந்து அவர்கள் கடற்கரைப் பகுதியில் இருந்த உள்நாட்டுக்குப் புலம் பெயரும் வரை வழக்கில் இருந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
Sea Moss: தைராய்டை குணப்படுத்தும் கடல் பாசி! 
Caulerpa lentillifera or sea grapes

இது அயோடின் சத்து நிறைந்தது. மேலும், நீரிழிவுநோய், கொழுப்பு குறைக்கும் திறன் கொண்டுள்ளது என்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com