மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கிரீஸ் மற்றும் ரோம் நகர மக்கள் அந்தக் காலத்திலேயே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது. ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளில் ஒன்றுதான் அவரைக்காய்.
துவர்ப்பு சுவையான அவரைக்காய், பலவித நோய்களை சரிசெய்ய உதவுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். அவரைக்காய் சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது.
அவரை என்றாலே நார்ச்சத்து காய் என்பதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இதை சேர்த்து கொள்ளலாம். அவரையில் உள்ள விதை அதாவது பட்டாணியும் மிகச்சிறந்த உணவு. அவரை பிஞ்சுவிலும் சத்துக்கள் அதிகம். இதை சமையலில் சேர்த்து கொண்டால் பித்தம் குறையும். ஒரு சிறிய கப் சமைத்த அவரைக்காயில், ஒரு நாளைக்கு தேவையான 35 சதவீத நார்ச்சத்து நமக்கு கிடைத்துவிடுகிறது.
'லெசித்தின்' எனும் நார்ப்பொருள் அவரைக்காயில் உள்ளது. இது ஹார்ட் அட்டாக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். மேலும் கொழுப்புப்பொருள் இரத்த குழாய்களை அடைத்து விடாமல் தடுக்கும். எனவே 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் சாப்பிட சிபாரிசு செய்யலாம். இதிலுள்ள 'பைட் டோஸ்பெரல்ஸ்' என்ற தாவர உயிர்கூறு புற்றுநோய்யை தடுக்கவல்லது. உடலில் புற்றுநோய் கட்டி வளர்வதை தடுப்பதில், இந்த அவரைக்கு நிறைய பங்கு உள்ளது.
உடல் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அத்தனை சத்துக்களும் இந்த அவரையில் உள்ளது. இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, கால்சியம், நியாசின், பைரிடாக்சின், ரிபோபிளவின், தைமின், சோடியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலினியம், ஜின்க் போன்ற சத்துக்கள் அவரையில் உள்ளது. அவரையில் உள்ள கால்சியம், பற்களுக்கும், எலும்புகளுக்கும், வலுதரக்கூடியது.
அதேபோல, ஈறுகளுக்கு பலம் சேர்ப்பவை. மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பல நன்மைகளை வழங்கும் வைட்டமின் பி அவரையில் அதிகமுள்ளது. கண் பார்வை மங்கல், வெள்ளெத்து போன்ற குறைபாடுகளுக்கு பிஞ்சு அவரைக்காய் சாப்பிட்டு வர அந்த குறைபாடுகள் சரியாகும்.
நார்ச்சத்து மிகுந்த இந்த அவரையை, சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிடலாம்.. ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை தடுப்பதிலும் அவரை அதிகம் உதவுகிறது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், அல்லது டயட்டில் இருப்பவர்கள், இந்த அவரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். காரணம், நார்ச்சத்தும் அதிகம் என்பது மட்டுமல்ல, கொழுப்பை கரைக்கக்கூடிய அத்தனை தன்மையும் இந்த அவரைக்கு உண்டு. நரம்பு கோளாறுகளையும் நீக்குகிறது.
இரவில் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி அவரையை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளலாம். எனெனில், இது ஜீரணசக்தியை அதிகரிக்கக்கூடியது.
அவரைக்காய்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால், இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளையும் தடுக்கிறது. அவரைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தயாமின் ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். இதன் காரணமாகவும் இதயம் மிகவும் ஆரோக்கியமாக செயல்படும் .
ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், இரும்பு சத்து நிறைந்த அவரையை சாப்பிட்டு வரலாம்.
நுரையீரல் தொந்தரவுகளை இந்த அவரை நீக்குகிறது. குறிப்பாக, இருமல், ஜுரம் மட்டுமல்லாமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், அவரையே சிறந்த தேர்வாக இருக்கிறது. அவரையை அடிக்கடி சாப்பிட்டடால், நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க வகை செய்கிறது.
உடல் நலம் மட்டும் இல்லாமல் மன நல ஆரோக்கியத்திற்கும் அவரைக்காய் பயன்படுகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
வயிற்றுப் புண்களை குணமாக்கும் இந்த அவரையை மூலநோய் தாக்கம் உள்ளவர்களும், மூட்டு வலி உள்ளவர்களும் வாரம் 2 முறையாவது சாப்பிட வேண்டும்.
உடல் சூடு மற்றும் மலச்சிக்கலால் வரும் கட்டிகளை உடைக்க விதை எடுத்த அவரைக்காய், மருதாணி, கிராம்பு சேர்த்து அரைத்து கட்டிகள் மீது பூசி வெள்ளை துணியில் துளைகள் இட்டு கட்டிவர கட்டிகள் உடையும். இன்றும்கூட, கிராமப்புறங்களில், கொப்புளம், காயங்களுக்கு, அவரை இலையை அரைத்து பத்து போடுவது வழக்கம். மூட்டு வலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.