தேநீர் பைகளில் ஒளிந்து இருக்கும் ஆபத்து!

நீங்கள் பாலில் தேநீர் பையினை முக்கி டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? இந்த செய்தி உங்களுக்கு தான்...
Tea bags
Tea bagsImg Credit: Statesman
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

பொதுவாக டீ பேக் என்று அழைக்கப்படும் தேநீர் பைகள் மிகவும் நாகரீகமானதாகவும் சுத்தமானதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் தேநீர் பைகள் தீங்கு விளைவிக்கின்றன. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் தேநீர் பைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் ஒரு புதிய ஆய்வின் படி தேநீர் பைகளில் புற்றுநோய் மற்றும் பிற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மில்லியன் கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தேநீர் பைகளின் வெளிப்புற உறையில் பாலியஸ்டர், நைலான்-6, பாலிப்ரொப்பிலீன் மற்றும் செல்லுலோஸ் போன்ற மோசமான பிளாஸ்டிக் பொருட்கள் சேர்த்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மூச்சுத் திணறலுக்கு நிவாரணம் தரும் மூலிகை தேநீர்!
Tea bags

சூடான பால் மற்றும் சூடான நீரில் தேநீர் பைகளை வைக்கும்போது, ​​அவற்றுக்குள் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் அதன் இழைகள் உருகி தேநீருடன் கலக்கின்றன. இந்த பிளாஸ்டிக் கூறுகள் குடல் செல்களுக்குள் நுழைந்து, இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றன. இதனால் குடல் விரைவிலேயே பாதிப்படைகிறது. இரத்தமும் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன.

தேநீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் இரத்தத்தின் வழியாக இதயத்தில் கலந்து மூளை மற்றும் நரம்பியல் மண்டலத்தை பாதிக்கிறது. அதில் உள்ள நானோ பிளாஸ்டிக் கூறுகள் குடலில் புற்று நோயை உருவாக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் தேநீர் வகைகள்!
Tea bags

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குடலில் குவிந்து செரிமான அமைப்பை பாதிக்கும். தேநீர் பைகளில் இருந்து நானோபிளாஸ்டிக் கசிந்து உடலில் சேர்ந்து செரிமான அமைப்பு மற்றும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது. இதனால் குடல் அழற்சி நோய் ஏற்படும். வயிறு புண், வயிறு உப்புசம், குடல் புண் ஆகியவை உருவாகிறது.

தேநீர் பைகள் சுத்தம் மற்றும் சுகாதாரமாக நாகரீகமாக தோன்றினாலும், அவற்றில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோபிளாஸ்டிக்ஸ் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
குளிருக்கேற்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தேநீர் வகைகள்!
Tea bags

தேநீர் பைகள் மட்டுமல்ல, பிளாஸ்டிக் கப்புகளில், மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப்களிலும் தேநீர் அல்லது சூடான பானம் அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

பாரம்பரிய முறையில் தேநீர் பருக பழகிக் கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியம். அதுவே பாதுகாப்பு.

logo
Kalki Online
kalkionline.com