Ways to Succeed in Online Business!
Ways to Succeed in Online Business! 
பொருளாதாரம்

ஆன்லைன் பிசினஸில் வெற்றி பெறும் வழிகள்!

க.இப்ராகிம்

ஆன்லைன் பிசினஸ் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

இணைய வளர்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான பங்களிப்பை உலக அரங்கில் இந்தியா செலுத்தி வருகிறது. இந்தியாவின் கிராம புற பகுதிகள் முதல் மலை பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் தடையற்ற இணைய வசதியை கிடைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரும் பகுதிகளில் தடையற்ற 5 ஜி சேவை இலவசதி கிடைக்கின்றது. மேலும் இந்தியாவில் இணைய கட்டணம் மிகக் குறைவாக இருப்பதும், மக்களுக்கு கூடுதலான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இவ்வாறான சூழல்களினால் இந்தியாவிற்கு இணைய வழி வர்த்தகம் ஏற்ற ஒன்றாக மாறியிருக்கிறது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இன்று அனைத்து வகை பொருட்களையும் இணைய மூலம் விற்பனை செய்யும் வாய்ப்பு எளிதாகப்பட்டிருக்கிறது. வீட்டில் குடிசைத் தொழிலாக செய்யும் பொருட்களைக்கூட இணைய வழியாக எளிதில் விற்பனை செய்ய முடியும். தற்பொழுது பிஸ்னஸ் வாட்ஸ் அப் இதற்கான வாய்ப்பை சுலபமாக்கி இருக்கிறது. மேலும் பல்வேறு வகையான சமூக ஊடகங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் வர்த்தக வியாபார நடவடிக்கைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இணைய வழியில் பிசினஸ் செய்ய விரும்புவோர் தாங்கள் தேர்வு செய்த உற்பத்தி பொருட்களை பல்வேறு வகையான சமூக ஊடகங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் மூலமாக எளிமையாக செலவின்றி விளம்பரப்படுத்த முடியும். இதற்கு பகுதி நேரம் ஒதுக்கினாலே போதுமானது. தினசரி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வது வணிகத்தை விரிவு படுத்த உதவும்.

மேலும் விற்பனை செய்யும் பொருளின் தரம் மற்றும் எடையாகியவை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் இணைய வழியில் தற்போது பெரும் பாலான மோசடி செயல்கள் நடைபெறுவதால் சரியான பொருட்களை விற்பனை செய்பவரால் மட்டுமே நிலையான கஷ்டமரை உருவாக்க முடியும். அதிலும் விற்பனைக்கு தேர்வு செய்யும் பொருட்களின் போட்டி சந்தையில் குறைவாக இருக்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும்.

இணைய வர்த்தகத்தில் கட்டணங்களை வசூலிப்பதும் தற்போது எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை இதற்கு உறுதுணையாக மாறி இருக்கிறது. அதே சமயம் வியாபாரம் செய்பவர் சரியான நேரத்தில் நுகர்வோரை பொருட்கள் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொருள் வாங்கிய கஷ்டமார்களிடம் மீண்டும் மீண்டும் தொடர்பில் இருப்பது வணிகத்தை பெருக்கும்.

மேலும் மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்க ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஜிஎஸ்டி எண்களை பெற்றுக் கொள்வது அல்லது உணவு பொருட்களாக இருப்பின் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உரிமங்களை 1500 ரூபாய் செலவு செய்து பெற்றுக்கொள்வது வணிகத்தை விரிவடைய செய்யும் வழியாகும்.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT