வெள்ளித்திரை

ஹீரோவை காப்பாற்றிய ஹீரோயின்!

ராகவ்குமார்

பிச்சைகாரன்-2 படத்தில் பாடல் காட்சியின்போது, எதிர்பாராத விதமாக கடலில் விழுந்த தன்னை படத்தின் நடிகை காவியா தப்பார் மற்றும் அவரின் உதவியாளர்கள் இணைந்து காப்பாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாக உள்ள படம் 'பிச்சைக்காரன் 2'. இந்த மாதம் 19-ம் தேதி படம் வெளியாக உள்ளதை அடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய அவர்,  “முதல் முறை இயக்குநராகி உள்ளேன். பல பேட்டிகளில் என்னிடம் இயக்குநராக ஆசை இருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். நான் இயக்குநரானது தற்செயலாக நடந்தது. இதை நிறைவேற்றி எனக்கு பக்கபலமாக இருந்த எனது அணியினருக்கு நன்றி. கண்டிப்பாக எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மே 19 அன்று வெளியாகிறது. இந்தியில் மட்டும் ஒருவாரம் கழித்து வெளியாகிறது. படம் யூ/ஏ சர்டிஃபிகேட் வாங்கியுள்ளது. பொதுவாக ஆக்‌ஷன் காட்சிகளில்தான் கீழே விழுந்து அடிவாங்குவார்கள். ஆனால், நான் காதல் காட்சிகளில் அடிவாங்கி இருக்கிறேன்.

கடலில் படமாக்கப்பட்ட பாடல் காட்சியின்போது நிலைதடுமாறி நான் கடலில் விழுந்துவிட்டேன். அப்போது என்னை உடனடியாக நீச்சல் தெரிந்த படத்தின் ஹீரோயின் காவியா தப்பாரும் மற்றும் அவரின் உதவியாளரும்தான் கடலில் குதித்து என்னை காப்பாற்றினார்கள். பின்னர், படக்குழுவினர் வந்து என்னை மீட்டனர். இந்த விபத்தினால் என் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். தற்போது உடல்நலன்தேறி ஆரோக்கியமாக உள்ளேன். ஆபத்தில் இருந்து என்னை சரியான நேரத்தில் காப்பாற்றிய படத்தின் ஹீரோயின் காவியா தப்பாருக்கு நன்றி. அந்த விபத்தில் இருந்து மீண்ட பிறகுதான் இன்னும் புத்துணர்ச்சியாக உள்ளேன். மனதளவில் இன்னும் தெம்பாகவே இருக்கிறேன். பயப்பட எதுவும் இல்லை. நம்பிக்கையோடு இன்னும் அதிக விஷயங்கள் செய்ய தயாராக உள்ளேன். இந்த படத்தில் வெற்றி பெற்று விட்டால் அஜித், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கவும் தயார். பிச்சைகாரன் 2 படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய தொழில்நுட்பக்குழுதான். அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT