வெள்ளித்திரை

நடிகை சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

கல்கி

நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏறபட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த அக்டோபர் மாதம் தனது கணவரான நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தர். இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். அதன் பின்னர் மன அமைதிக்காக ஆன்மிக சுற்றுலா சென்ற நடிகை சமந்தா, கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அதில் அவரது உடை சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் நடிகை சமந்தா.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மேலாளர் மகேந்திரா தெரிவித்துள்ளது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருடைய விளம்பரதாரரான வம்சி சேகரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார. அதில் அவர் தெரிவித்ததாவது:

சமந்தா பூரண நலமாக உள்ளார். அவருக்கு லேசான இருமல் இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் நேற்று சில பரிசோதனைகளை மேற்கொண்டார். தற்போது சமந்தா முற்றிலும் நலமுடன் உள்ளார்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா கடைசியாக தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் குணசேகரன் இயக்கத்தில் ''ஷகுந்தலம்'' என்ற படத்திலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' ஆகிய படங்களிலிலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT