sustainable interior designing
sustainable interior designing https://www.designcafe.com
கலை / கலாச்சாரம்

நிலைப்புத் தன்மையுள்ள உள்புற வடிவமைப்பின் முக்கியத்துவம்!

ஆர்.ஐஸ்வர்யா

நிலைப்புத் தன்மையுள்ள (sustainable interior designing) உள்புற வடிவமைப்பு என்பது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் முறையில் இடங்களை அமைத்தல் மற்றும் அலங்கரிக்கும் கலையாகும். இது பொதுவாக புதுப்பிக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும், குறைந்த செலவு மற்றும் உயர்ந்த வாழ்வாதார நன்மைகளை உறுதிசெய்யும் வடிவமைப்பு முறைகளைக் கொண்டது.

sustainable interior designingன் முக்கியத்துவம்: தற்போது பூமியின் வெப்பநிலை உயர்ந்து, பனிப்பாறைகள் உருகுவது அதிகரிப்பு, காடழிப்பு உலகம் முழுவதும் பரவி வருவதால், சூழலியல் ரீதியாக நல்ல வாழ்க்கை முறையை வழிநடத்துவதும், எதிர்கால சந்ததியினருக்கு போதுமான வளங்களை விட்டுச்செல்வதும் காலத்தின் தேவை. அதனால் வீடு கட்டும்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான அழகிய இன்டீரியர்களை உருவாக்குவதே இந்த பாணியின் முக்கிய அம்சமாகும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உட்புறம் ஏன் அவசியம்?:

1. இது சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கங்களைக் குறைக்கிறது. உட்புற வடிவமைப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

2. மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை குறைக்க உதவும்.

3. இந்த வடிவமைப்பு பாணியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மலிவு விலையில் இருக்கும்.

4. இயற்கையான, மறுசுழற்சி மற்றும் புதுப்பிக்கக்கூடிய மூலப்பொருட்களை பயன்படுத்துதல், உதாரணமாக புல், மரம், மற்றும் மறுசுழற்சி செய்யப்படும் காய்கறிகள், கழிவுகளைக் குறைக்கிறது.

5. நீண்ட கால பயன்பாடு மற்றும் வாழ்வாதார நன்மைகள் கிடைக்கும். பொருட்களின் ஆயுளை அதிகரிப்பதன் மூலம் குறைந்த பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு செலவுகள்.

பசுமை வடிவமைப்பு மற்றும் நிலையான உட்புற வடிவமைப்பு இடையே உள்ள வேறுபாடு என்ன?

பசுமையான உட்புற வடிவமைப்பு நிகழ்காலத்தில் கவனம் செலுத்துகிறது. அதேசமயம் நிலையான உட்புற வடிவமைப்பு எதிர்காலம் சார்ந்தது. பச்சை உட்புற வடிவமைப்பு மறுசுழற்சி மற்றும் மாற்று ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துகிறது. நிலையான உட்புற வடிவமைப்பாளர்கள் ஒட்டுமொத்த வடிவமைப்பு செயல்முறையையும் கருத்தில் கொள்வார்கள்.

நிலையான உட்புற வடிவமைப்பைப் பெறுவதற்கான 15 எளிய குறிப்புகள்:

1. ஆற்றல் - திறனுக்கான தேர்வு: பல செயற்கை விளக்குகளுக்குப் பதிலாக சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்கும் பெரிய ஜன்னல்களைத் தேர்வு செய்வது. இரண்டாவதாக, சூரிய சக்தி போன்ற மாற்று ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவது.

2. பிரம்பு மரச்சாமான்களைத் தேர்ந்தெடுக்கவும்: பிரம்பு என்பது இயற்கையாக வளரும் கொடியின் இனமாகும், இது பெரும்பாலும் மரச்சாமான்கள், திரைச்சீலைகள் மற்றும் அலங்காரங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இந்தப் பொருள் வீட்டிற்குக் கொடுக்கக்கூடிய பழைமையான, பொஹேமியன் தோற்றம் காரணமாக வீட்டு உரிமையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

3. மாடுலர் யூனிட்கள்: மாடுலர் யூனிட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மாடுலாரிட்டி நிலையானது. புதிய வடிவமைப்பை உருவாக்க அதே பொருட்களை மறுசீரமைக்கலாம். எனவே, புதிதாக ஒன்றை வாங்கத் தேவையில்லை. இது கழிவுகளைக் குறைக்க உதவுகிறது.

4. நீடித்த பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்: நீண்ட காலம் நீடிக்கும் நீடித்த பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும். திட மரத்தை விட, வெனீர் மிகவும் நிலையான மற்றும் நீடித்த விருப்பமாகும்.

5. உள்ளூர் வணிகங்களிலிருந்து ஆதாரம்: உள்ளூர் வணிகங்கள் மற்றும் கைவினைஞர்களிடமிருந்து பொருட்களைப் பெறுவது நீண்ட தூர போக்குவரத்தின் தேவையைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, பெரும்பாலான உள்ளூர் வணிகங்கள் சூழல் நட்புடன் கையால் செய்யப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குகின்றன. மேலும், உள்ளூர் அலங்காரப் பொருட்கள் வீட்டிற்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கும்.

6. பழைய மரச்சாமான்களை புதுப்பிக்கவும்: இயற்கைக்கு உகந்த உட்புற வடிவமைப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்று பழைய பொருட்களை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்துவதாகும். இது கழிவுகளை குறைக்கவும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

7. குறைந்தபட்ச வடிவமைப்பு: ஒரு குறைந்தபட்ச வடிவமைப்பு பாணி டிரெண்டிங் மட்டுமல்ல, தேவையற்ற விரயத்தைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும். இது சிறிய அடுக்குமாடிகளுக்கு ஏற்றது மற்றும் மிகவும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும்.

8. தாவரங்களை அலங்காரமாகப் பயன்படுத்துவது: தாவரங்களை அலங்காரமாகப் பயன்படுத்துவது பெரும்பாலான அலங்காரப் பொருட்களுக்கு சிறந்த மாற்றாக செயல்படுகின்றன. ஒவ்வொரு உட்புற வடிவமைப்பு பாணியிலும் பொருந்துகின்றன. வீட்டில் அதிக இயற்கை வெளிச்சம் இல்லை என்றால், சதைப்பற்றுள்ள தாவரங்களை தேர்வு செய்யவும்.

9. டெரகோட்டா தரை: ஒரு சூளையில் சுடப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட டெரகோட்டா சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, அதிக நீடிப்பு, பராமரிக்க எளிதானது மற்றும் அந்த சூடான சிவப்பு ஓடுகள் ஈரப்பதத்தை எதிர்க்கும்.

10. மீட்டெடுக்கப்பட்ட வூட் ஃபால்ஸ் சீலிங்: அதிக மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். மரத்தின் தோற்றத்தை விரும்பினால், புத்தம் புதிய ஒன்றைத் தவிர்த்து, மீட்டெடுக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.

11. கரிம சேர்மங்களைக் கொண்ட வண்ணப்பூச்சுகளைத் தேர்ந்தெடுக்கவும்: குறைந்த அளவு ஆவியாகும் கரிம சேர்மங்களைக் கொண்ட வண்ணப்பூச்சுகள் சுற்றுச்சூழலுக்கு நல்லது மட்டுமல்ல, ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் தவிர்க்க சிறந்த வழி.

12. டிரையர் வேண்டாம்: துணிகளை உலர்த்த ட்ரையரை பயன்படுத்தாமல் வெயிலில் உலர்த்தலாம்.

13. கிரேவாட்டர் அமைப்பு: ஒரு கிரேவாட்டர் அமைப்பு வீட்டுக் கழிவுநீரை பாசன நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்த உதவுகிறது, அதன் மூலம் தண்ணீரை சேமிக்கிறது.

14. தெர்மோஸ்டாட்டைப் பயன்படுத்தவும்: தெர்மோஸ்டாட் ஒரு சிறந்த முதலீடாகும், ஏனெனில் இது வீட்டிற்குள் வெப்பத்தையும் குளிரூட்டலையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

15. இயற்கையான துப்புரவுப் பொருட்கள்: சுண்ணாம்பு மற்றும் வினிகர் போன்ற இயற்கை துப்புரவு பொருட்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மாதாந்திர மளிகை பில்களைக் குறைக்கவும் உதவும்.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

SCROLL FOR NEXT