10 Secrets to make Special Curd Rice.
10 Secrets to make Special Curd Rice. 
உணவு / சமையல்

சாதா தயிர் சாதத்தை ஸ்பெஷல் தயிர் சாதமாக மாற்றும் 10 ரகசியங்கள்! 

கிரி கணபதி

தயிர் சாதம் பல இந்திய வீடுகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இது அதன் தனித்துவமான சுவைக்கு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தை அள்ளித் தருவதிலும் பிரபலமானது. வெயில் காலத்துக்கு ஏத்த சிறந்த உணவாக தயிர் சாதம் பார்க்கப்படுகிறது. இதை செய்வது எளிதாகத் தோன்றினாலும், தயிர் சாதத்தின் சிறந்த ருசியைக் கொண்டுவர சில நுணுக்கங்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இந்த பதிவில் தயிர் சாதத்தின் சிறந்த சுவையைக் கொண்டுவர கடைபிடிக்க வேண்டிய 10 குறிப்புகள் என்னவென்றுப் பார்க்கலாம். 

  1. சரியான அரிசியைத் தேர்ந்தெடுங்கள்: நல்ல சுவையான தயிர் சாதம் செய்ய அதற்கு ஏற்ற அரிசியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். குறிப்பாக பாஸ்மதி, பொன்னி, சோனா மசூரி போன்ற அரிசியில் தயிர்சாதம் செய்தால், சுவை நன்றாக இருக்கும்.

  2. அரிசியை சரியாக சமைக்கவும்: தயிர் சாதத்திற்கு அரிசி கொஞ்சம் குழைந்தது போல் இருப்பது நல்லது. எனவே எந்த அரிசியாக இருந்தாலும் அதை கொஞ்சமாக குழைய விடுங்கள். அதேநேரம் அதிகம் குழைந்துவிடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். 

  3. சரியான நிலைத்தன்மை: தயிர் சாதத்திற்கு அதன் நிலைத்தன்மை மிகவும் முக்கியம். கொஞ்சம் க்ரீமியாக கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். இந்தப் பதத்தை அடைய தயிரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிவிடுங்கள். தயிரில் உள்ள ஈரத்தை அரிசி உறிஞ்சிவிடும் என்பதால், தயிர் சாதம் கெட்டியாவதற்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள். 

  4. புதிய தயிர் பயன்படுத்தவும்: தயிர் சாதத்தை எப்போதும் புதிதாக தயாரித்த தயிரில் செய்யவும். இதில் ஒரு விதமான பால் சுவை இருக்கும் என்பதால், லேசான புளிப்பு மற்றும் பால் சுவை சேர்ந்து, தயிர் சாதத்தின் சுவை நன்றாக இருக்கும். 

  5. தாளிப்பைச் சேருங்கள்: தயிர் சாதத்தில் தாளிப்பைச் சேர்ப்பது அதன் சுவையை மேலும் அதிகரிக்கும். வெறும் சாதத்தில் தயிரைக் கொட்டி சாப்பிடுவதற்கும், அதில் கொஞ்சமாக கருவேப்பிலை, பச்சை மிளகாய், கடுகு, நெய் போன்றவற்றை தாளித்து சேர்த்து சாப்பிடுவதற்கு வித்தியாசம் உள்ளது. 

  6. துருவிய கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்க்கவும்: கேரட் மற்றும் வெள்ளரிக்காய் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையை தயிருக்கு சேர்க்கிறது. இதன் மூலமாக தயிர் சாதம் பார்க்கவும், சாப்பிடவும் நன்றாக இருக்கும். 

  7. சரியான அளவு உப்பு: தயிர் சாதத்தில் சரியான அளவு உப்பு சேர்க்க மறக்காதீர்கள். உப்பின் அளவு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருந்தாலும், அதன் சராசரி அளவைக் குறைக்க வேண்டாம். 

  8. கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும்: தயிர் சாதம் தயாரித்து முடித்ததும் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை மேலே தூவி அலங்கரிக்கவும். இவை தயிர் சாதத்திற்கு அழகைக் கூட்டுவது மட்டுமின்றி, ஒரு தனி ஃபிளேவரையும் சேர்க்கிறது. 

  9. கொஞ்ச நேரம் பொறுங்கள்: தயிர் சாதத்தை தயாரித்து உடனடியாக சாப்பிட்டுவிடாமல், அதில் சேர்க்கப்பட்ட பொருட்களின் சுவை அனைத்தும் ஒன்றாகக் கலக்கும்வரை பொறுக்கவும். 

  10. குளிர்ச்சியாக சாப்பிடுங்கள்: தயிர் சாதத்தை சூடாக சாப்பிடுவதற்கு பதிலாக, கொஞ்சம் குளிரூட்டப்பட்ட நிலையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலமாக ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவை உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் தயிர்சாதம் தயாரித்தால், அதன் சுவை நீங்கள் நினைப்பதை விட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT