மண் பானை குடிநீர் 
வீடு / குடும்பம்

சாதாரண மண் பானை சத்தான மண் பானையாக மாற என்ன செய்வது?

ம.வசந்தி

யற்கையோடு இயைந்த வாழ்க்கையே உடல் நலத்திற்கு எக்காலத்திலும் தீங்கு விளைவிக்காது. அத்தகைய இயற்கையான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் பல வோல்ட் மின்சாரத்தை காலி செய்து தண்ணீரைக் குளிர வைப்பதற்குக் கண்டுபிடித்த ஃபிரிட்ஜ் தொழில் நுட்பத்தை, ஆடம்பரமே இல்லாமல் அசால்ட்டாக நம்மூர் கிராமத்து விஞ்ஞானிகள், வெறும் மண்பானையை வைத்தே செய்து காட்டிவிட்டார்கள். புதியதாக மண்பானையை வாங்குபவர்கள் உடனடியாக அதனைப் பயன்படுத்தக் கூடாது. மண் பானையின் பலனை முழுமையாகப் பெற அவர்கள் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* புதியதாக மண் பானையை வாங்குபவர்கள் பானையை வெளிப்புறத்தில் நன்றாகக் கழுவ வேண்டும். பானையின் உள்பக்கத்தில் கழுவக் கூடாது.

* முதலில் பானையில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வைத்து விட வேண்டும். அதன் பிறகு பானையை எடுத்து நிழலில் நன்கு காய வைக்க வேண்டும். பிறகு பானையில் நீர் ஊற்றி வைக்க வேண்டும். சில மணி நேரத்திற்கு ஒரு முறை நீரை மாற்ற வேண்டும்.

* அரிசி கழுவிய நீரை ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். கல் உப்பு சேர்த்த நீரைப் பானையில் ஊற்றி அரை நாள் வரை ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் வரை சாதாரண நீர், உப்பு நீர் மற்றும் அரிசி கழுவிய நீர் போன்றவற்றை ஊற்ற வேண்டும்.

* பிறகு பானையைக் காய வைத்து நன்றாக உலர்ந்த பிறகு குடிநீரை ஊற்றிப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

* முக்கியமாக பானையை வெயிலில் காய வைக்க வேண்டாம். அதிகப்படியான வெப்பத்தினால் பானையில் விரிசல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல், பானையை பயன்படுத்தும் போது, தரையில் வைக்காமல், சிரமப்படாமல் கொஞ்சம் மணல் அள்ளி வந்து அதனைக் கொட்டி குவித்து, அதன் மேல் பானையை வைக்கலாம். அதோடு சுத்தமான துணியை நன்றாகத் தண்ணீரில் நனைத்து பானையின் மீது சுற்றி விடலாம். இப்படிச் செய்வதால் மண் பானையின் நீரானது கூடுதல் குளிர்ச்சியைத் தரும். மறக்காமல் பானையை மூடி வைக்க வேண்டும்.

* 10 லிட்டர் தண்ணீர் மண் பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, நாலு தேக்கரண்டி சீரகம் இவைஅனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு. காலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரைப் பயன்படுத்தும்போது உயிராற்றல் அதிகரிக்கும்.

சாதாரணமாக மண் பானையில் பொங்கும் சோறு நல்ல ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மண் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT