Ambedkar
Ambedkar 
Motivation

டாக்டர் அம்பேத்கர் கூறிய அற்புதமான 15  போதனைகள் – நம் வாழ்வியல் பாடங்கள்!

ஆர்.ஜெயலட்சுமி
  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள்; அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

  • மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த நற்பெயர் உனக்கு வேண்டாம்.

  • வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

  • ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதில் வாழும் பெண்கள் அடைந்த வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம்.

  • மாபெரும் இலட்சியத்தையும் வெற்றியையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

  • எவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

  • அறிவைத் தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடிவரும்.

  • உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.

  • பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான், சிங்கங்கள் அல்ல. சிங்கங்களாக இருங்கள்.

  • முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் அவை, 1) பொது ஒழுக்கம், 2) முன்னேற்றத்தில் சிரத்தை, 3) சிந்தனையில் மகத்தான புரட்சி.

  • வாழ்க்கை நீண்டதாக இருப்பதை விட உன்னதமானதாக இருக்கவேண்டும்.

  • மனதின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்.

  • மனதை பண்படுத்துவதே மனிதராய் வாழ்வதின் உச்சபட்ச இலக்கு.

  • அறிவு, நன்னடத்தை, சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

  • ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை. இதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம்.

ரொம்ப tired-ஆ இருக்கு...ஒரு நாள் லீவு கிடைக்குமா?

புதூர் மலைக் கிராமத்திலிருந்து புளிச்சாறு ஏற்றுமதி!

அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!

முதுகுத் தண்டுவட பிரச்னைகளைத் தீர்க்கும் பிரண்டை!

SCROLL FOR NEXT