7 Qualities of Great People!
7 Qualities of Great People! 
Motivation

சிறப்பான நபர்களின் 7 உயரிய குணங்கள்!

கிரி கணபதி

சிறப்பான நபர்களின் பண்புகளுக்கான வரையறை தொடர்ச்சியாக மாறி வரும் உலகில், சில குணநலன்கள் என்றும் அழியாமல் சிறந்த நபர்களை வரையறுக்கும் அறிகுறிகளாக இருக்கின்றன. இந்தப் பதிவில் அவற்றைப் பற்றிதான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்போது நான் சொல்லப்போகும் 7 பண்புகள் உங்களிடம் இருந்தால், நீங்களும் சிறப்பான நபர்தான் எனப் பெருமிதம் கொள்ளலாம். 

  1. மரியாதை: சிறப்பான நபர்கள் எப்போதுமே வாழ்க்கையில் எல்லா சூழல்களிலும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். பிறருடைய பின்னணி, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை பொருட்படுத்தாமல், அனைவருடனும் ஒரே மாதிரி பழகுவார்கள். பிறர் சொல்வதை காதுக் கொடுத்துக் கேட்டு அவர்களின் கண்ணோட்டங்களையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள முயல்வார்கள். 

  2. நேர்மை: ஒரு சிறப்பான மனிதனின் குணத்தில் மிக முக்கியமானது நேர்மை. ஒருவரின் உயரிய பண்பை பிறருக்கு தெரியப்படுத்துவது, அவரது நேர்மை மற்றும் நம்பகத்தன்மைதான். அவர்கள் வாழ்வில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் பொறுப்பை தாங்களே ஏற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலமாக மற்றவர் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக இவர்கள் திகழ்கின்றனர். 

  3. ஊக்கமளிக்கும் பண்பு: சிறப்பான நபர்கள் எப்போதுமே பிறருக்கு ஊக்கமளிப்பவர்களாக இருக்கின்றனர். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சாதனைகளையும் கொண்டாடி, அவர்களுக்கு தேவைப்படும்போது உதவி செய்யவும் விரும்புகின்றனர். 

  4. பேச்சுத்திறன்: எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் சரியாக பேசுவது இன்றியமையாத ஒன்றாகும். சிறப்பான மனிதர்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் சிறந்து விளங்குகின்றனர். தான் என்ன சொல்கிறோமோ அதை செய்து காட்டும் மனப்பான்மை இவர்களிடம் அதிகம் இருக்கும். 

  5. லட்சியம்: ஒரு மனிதன் தன் இலக்குகள் மற்றும் கனவுகளை பின்தொடர்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறான் என்றால் அவன் சிறப்பானவன் என்றுதான் அர்த்தம். பெரும்பாலான நபர்களைப் போல சராசரியாக இருந்துவிட்டு வாழ்க்கையை கழித்து விடாமல், தனக்கான துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க விரும்புபவர்கள் உண்மையிலேயே சிறப்பு மிக்கவர்கள் தான். 

  6. உணர்வுக் கட்டுப்பாடு: இத்தகைய நபர்களுக்கு எதுபோன்ற இடங்களில் எத்தகைய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியும். ஒரு சராசரி மனிதனிடமிருந்து வேறுபடுத்தும் முக்கிய பண்புகளில் உணர்ச்சிக் கட்டுப்பாடு முக்கியமான பண்பாகும். எனவே, எங்கே, யாரிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எனத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சிறப்பான இடத்தை அடைகின்றனர்.

  7. சுயவளர்ச்சியில் கவனம்: உங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அதற்காக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறீர்களா? அப்படியானால் நீங்களும் சிறப்பான நபர்தான். சராசரி மனநிலையில் இருக்கும் நபர், ஏதோ ஒன்றை செய்து தன் வாழ்க்கையை கழித்துவிடலாம் என்ற நினைப்பிலேயே இருப்பார். ஆனால் சிறப்பான குணம் கொண்டவர்கள், ஒவ்வொரு நாளும் தன் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அதற்காக முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். 

இந்த ஏழு குணநலன்கள் ஒருவனிடம் இருந்தால், அவன் உண்மையிலேயே மிகச் சிறப்பான மனிதன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண், பெண் என இருபாலருக்கும் இந்தப் பண்புகள் பொருந்தும். எனவே உங்களை நீங்கள் சிறப்பாக மாற்றிக் கொள்ள இத்தகைய பண்புகளை வளர்த்துக் கொள்வது நல்லது. 

இம்புட்டு மல்பெரி அம்புட்டு ஆரோக்கியமா?

விவாகரத்து செய்யும் ஜி.வி பிரகாஷ் - சைந்தவி தம்பதி... ரசிகர்கள் ஷாக்!

வேர்களின் முடிச்சுகளில் ஒளிந்திருக்கும் ரைசோபியம் என்ன செய்யும் தெரியுமா?

மைய கணினியுடனான இணைப்பு முறிந்தால் அதோகதிதானா? Edge Computing சொல்வது என்ன?

காஷ்மீரின் ஸ்பெஷல் ‘பிங்க் டீ’ பற்றித் தெரியுமா?

SCROLL FOR NEXT