தமிழ்நாடு சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா  
பயணம்

சாகச சுற்றுலா போக ஆசையா? தமிழ்நாட்டில் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

சேலம் சுபா

சுற்றுலாவில் பொழுதுபோக்கு சுற்றுலா, யாத்திரை சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா எனப் பல வகை சுற்றுலாக்கள் உண்டு. அதில் சிலர் எந்த விளையாட்டுகளிலும் ஆர்வமின்றி அல்லது பயந்து அமைதிச்சுற்றுலாவை மட்டும் விரும்புவதுண்டு. அதில் "ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி" என த்ரில்லிங் சுற்றுலா செல்லும் சாகசப் பிரியர்களும் உண்டு. அவர்களில் ஒருவராக நீங்கள இருந்தால் இந்த இடங்களுக்குப் போய் ஜாலியா அனுபவியுங்கள்.

சாகச சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்றதாகத் திகழ்கிறது இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாடு. தனித்துவமான மற்றும் மாறுபட்ட நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு, பாரா செயிலிங், ஆங்லிங், கயாக்கிங், மலையேற்றம், ராப்பல்லிங், பாறை ஏறுதல் போன்ற பலவிதமான சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டு மகிழ ஏற்ற இடமாகும். உண்மையில், தமிழ்நாடு ஆண்டு முழுவதும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச சாகசப்பயணிகளின் விருப்பமாகிறது எனலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் பல குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்து, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் சாகச சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது.

சென்னை: சென்னை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புகழ்பெற்ற முதலியார் குப்பம் படகு இல்லம் (ECR) மற்றும் சென்னையில் முட்டுக்காடு முட்டுக்காடு படகு இல்லம் ஆகியவற்றில் பலவிதமான சாகச நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சுற்றுலாத் துறை நகரில் உள்ள படகு இல்லங்கள் முழுவதும் கயாக்கிங், படகுப் பயணம், அதிவேக வாட்டர் ஸ்கூட்டர்கள், உல்லாசப் படகுகள், சர்ஃபிங், பனிச்சறுக்கு, பவர் படகு சவாரி மற்றும் வாழைப் படகுகள் போன்றவைகளை இயக்கி வருகிறது. அதேபோல், நீலகிரி, கொடைக்கானல், ஆனைமலை மலைகள் உள்ளிட்ட பல்வேறு அழகிய மலை வாசஸ்தலங்களில் மலையேற்றம் செய்பவர்களுக்கு மலையேற்ற உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

கொடைக்கானல்: 'மலைவாசஸ்தலங்களின் இளவரசி' யான திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோடைகால ஓய்வு விடுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 6,998 அடி உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலையேற்றம் அனைவரின் கனவாகும். பசும்புல்வெளிகள், ஷோலா காடுகள், பாறைகள், நீரோடைகள், தோட்டங்கள் மற்றும் பூச்செடிகள் வழியாக ரசித்து ஏறும் எண்ணற்ற அழகான மலையேற்றப் பாதைகள் உங்கள் என்றென்றும் நினைவில் தங்கும் அனுபவம் தரும்.

பட்லகுண்டு, பெருமாள்மலை - பாலமலை - தலையார் - மஞ்சளார் - தேவதானப்பட்டி- டால்பின் மூக்கு - வெள்ளகேவி - வெங்கயப்பாறை - கும்பக்கரை - பெரியகுளம் - செம்பகனூர் - கொரப்பூர் - அடுக்கம் - செழும்பதோப்பு - கும்பக்கரை - பெரியகுளம் - குரங்கணி - சோத்துப்பாறை உள்ளிட்ட எண்ணற்ற மலையேற்றப் பாதைகள் இங்கு உண்டு.

ஏலகிரி: தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 4,628 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏலகிரி மலைகள் மலையேற்றப் பயணிகளுக்கு ஏற்ற நிலமாக கருதப்படுகிறது. 'ஏழைகளின் ஊட்டி' என்று அன்புடன் அழைக்கப்படும் அமைதியான ஏலகிரி மலைவாசஸ்தலம் பெங்களூரிலிருந்து செல்ல வார இறுதிப் பயணத்திற்கு ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது அங்கிருந்து (NH7 வழியாக) 158 கிமீ தொலைவில் உள்ளது. மலைக் காடுகள், மயக்கும் பள்ளத்தாக்குகள், சதுப்பு நிலங்கள், அற்புதமான சிகரங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவற்றால் சூழப்பட்ட ஏலகிரி மலைப்பகுதியில் 1000மீ முதல் 14 கிமீ வரை மலையேற்றப் பாதைகள் உள்ளன.

சுவாமிமலை ,நிலாவூர் ஜலகம்பாறை, கரடிமுனை,புங்கனூர் சுவாமிமலை மலை படகு இல்லம் - புளிச்சா குட்டை புத்தூர் - பெருமாடு அருவி போன்றவை ஏலகிரியில் உள்ள சில குறிப்பிடத்தக்க மலையேற்ற பாதைகளாகிறது.

ஆனைமலை: கடல் மட்டத்திலிருந்து 8,842 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆனைமலை தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகும். தென்னிந்தியாவின் மிக உயரமான மலையாகக் கருதப்படும் ஆனைமலை இலையுதிர் காடுகள், புல்வெளி பீடபூமி, காபி தோட்டங்கள், தேக்கு மரத் தோட்டங்கள் மற்றும் நினைவுச்சின்ன சிகரங்களைக் கொண்டவை. ஆனைமலை மலைகள் மலையேற்றத்திற்கு பல சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்குகின்றன. மேலும் மலையேற்றம் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகும். அக்காமலை - தனக்கம்லை - கொன்னலூர் மீன்பிடி குடில், வரகாளியார் - குறம்பள்ளியார் - வரகாளியார் சோலை - பெரும்குன்று மலை போன்றவை ஆனைமலையில் உள்ள சில குறிப்பிடத்தக்க மலையேற்றப் பாதைகள்.

ஊட்டி: மற்ற மாநிலங்களின் மலையேற்றப் பாதைகளுடன் ஒப்பிடும்போது, ​​ஊட்டியில் உள்ள மலையேற்றப் பாதைகள் மிகவும் விரும்பத்தக்கவை, ஏனெனில் அவை ஆரம்பநிலை மற்றும் அனுபவமுள்ள மலையேறுபவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. ஊட்டி மலையேற்றம் வைக்கோல் வயல்வெளிகள், பளிங்குகள், கல்லறைகள், பிரம்மாண்டமான யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் மூங்கில் தோப்புகள், அடர்ந்த வனப்பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அழகிய நீர்நிலைகள் வழியாக அழைத்துச் சென்று சொர்க்கத்தை காட்டுகிறது. பார்சன்ஸ் பள்ளத்தாக்கு - முக்கூர்த்தி ஏரி - பாண்டியர் மலைகள் - பைக்காரா நீர்வீழ்ச்சி - முதுமலை சரணாலயம் , பார்சன்ஸ் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல மலைப்பாதைககள் சாகசப் பயணத்துக்கு ஏற்றதாக உள்ளது.

சாகசம் தேவைதான், ஆனால் அதிலும் கவனமும் எச்சரிக்கையும் அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT