தீபம்

கொங்கு மண்டலத்தில் நிலாபிள்ளை வழிபாடு!

கல்கி

– காயத்ரி

தமிழர் பாரம்பரியத்தில் இறை வழிபாடுகளுடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாக தைப்பூசத்தை முன்னிட்டு, நிலாபிள்ளைக்கு சோறு மாற்றுதல் என்னும் கும்மி அடித்தல் நிகழ்ச்சி கொங்கு மண்டலத்தில் நடைபெற்று வருகிறது.
தைப்பூசத் திருவிழாவிள்கு முன்னதாக தொடங்கும் இந்த நிகழ்வில் இரவு நேரத்தில் நிலாவுக்கு வழிபாடு செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
அந்தியூர் அருகே உள்ள புதுமாரியம்மன் கோவிலில் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிலாச்சோறு கும்மியடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த கும்மியடித்தல் நிகழ்ச்சியில், பங்குபெறும் பெண்கள் அவர்களது வீட்டில் தினந்தோறும் சமைத்த உணவை எடுத்து வந்து,    சாணத்தால் பிள்ளையாருக்கு படைத்து அதைச்சுற்றி பெண்களும் மற்றும் சிறுவர்கள் கும்மியடித்து பாடல் பாடி நிலாவை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து படைத்த உணவை ஒருவருக்கொருவர் பரிமாறிக் உண்டு மகிழ்ந்தனர்,
இந்நிலையில்  நான்காவது நாளான இன்று, பச்சரிசி மாவு படைத்து, அப்பகுதியில் உள்ள பெண்கள் கும்மி பாட்டு பாடி இயற்கையோடு ஒன்றிணைந்து நிலாவை வழிபாடு செய்தனர்.
அப்போது கும்மிப்பாட்டை ஒருவர் பாட, கும்மியடித்து  பின் தொடர்ந்து பாடல் பாடிய படி பெண்கள் நிலாவை வழிபட்டனர்.இந்த நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறையை பின்பற்றி  கும்மி பாட்டு பாடி மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து இறுதி நாளான தைப்பூச தினத்தில், நிலாவுக்கு படைக்கப்பட்ட உணவை குழந்தைகளுக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் கொடுத்து மகிழ்ந்து, பிடித்து வைத்த பிள்ளையாரை கும்மி பாட்டு பாடிக்கொண்டே நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர்.
மேலும் இது குறித்து அந்த பெண்களிடம் கேட்டோம்.
" கொங்கு மண்டவத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த  விழா காரணமாக , விவசாயம் செழிக்கும் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை உண்டு.  மேலும் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து இருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த விழா இருக்கிறது" என்றனர்.
அதே போல, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் கும்மியடித்து நிலா பிள்ளையாரை வணங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆண்களும் பெண்களும் கும்மியடித்து தைப்பூசத்தை வரவேற்றனர்:
"நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் தைப்பூசத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வீடுகளில் உள்ள உணவு வகைகளை ஒரே இடத்தில் வைத்து கும்மியடித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு மூன்றாவது நாளான தைப்பூசத்திற்கு முதல் நாள் பிள்ளையாரை வணங்கி இரவு முழுவதும் கும்மியடித்து அதிகாலையில் பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது கொங்கு மண்டல வழக்கம். கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலா பிள்ளையார் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் ஊர் பொதுவாக அன்னதானம் வழங்கப்பட்டு ஆண்களும் பெண்களும் கும்மியடித்து பிள்ளையாரை வணங்கி தைப்பூசத்தை வரவேற்கிறோம்." என்றார்,  நிலா பிள்ளையார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தேவிகா .
 கல்லூரி மாணவி தாருண்யா கூறும்போது " இளைய தலைமுறைகளுக்கு கும்மி பாட்டு தெரியப் படுத்தும் நோக்கில் நிலா பிள்ளையார் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள் இதனால் இளைய தலைமுறை பெண்கள் கும்மிப்பாட்டு தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது"  என்று கூறினார்
பொதுவாக மார்கழி மாதம் பணி காலம் அந்த காலம் முடிந்து தை மாதம் வெப்பநிலை மாற்றம் ஏற்படும் இதனை கருத்தில் கொண்டு கைகளை தட்டி கும்மி அடிக்கும் போது கைகளில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு தைமாத வெப்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உடல் மாற்றமடையும் என்பது அறிவியல் காரணமாக கூறப்படுகிறது பொதுவாக  தைப்பொங்கல் சூரியனை வழிபடும் நிகழ்வாகவும் நிலா பிள்ளையார் சந்திரனை வழிபடும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT