செய்திகள்

4ஜி சேவை... கெத்து காட்டும் BSNL!

கல்கி டெஸ்க்

ந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வந்த பிறகு இந்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. ஊழியர்களுக்கு மாத ஊதியம் தர பணம் இல்லாமல் தவித்தது. இதனால் பல ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். தனது நீண்ட கால வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் நிறுவனம் இழந்தது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

 இந்திய தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியில், மத்திய அரசின் தற்சார்பு இந்தியா இலக்கை நோக்கிய பயணத்தில் இந்திய 4ஜி சேவையைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2022 பிப்ரவரி 31ஆம் தேதியன்று 6,000 தளங்களுக்கான பர்சேஸ் ஆர்டரை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டது. அதன்பிறகு, பிஎஸ்என்எல் தனது 1 லட்சம் 4ஜி தளங்களுக்கான டெண்டரை 2022 அக்டோபர் மாதத்தில் வெளியிட்டது.

23.10.2019 அன்று, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கான மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. தன்னார்வ ஓய்வுத் திட்டம் (விஆர்எஸ்), இறையாண்மை உத்தரவாதப் பத்திரங்களை உயர்த்துவதன் மூலம் கடன் மறுசீரமைப்பு, மூலதன உட்செலுத்துதல் மூலம் 4ஜி சேவைகளுக்கான அலைக்கற்றை நிர்வாக ஒதுக்கீடு, முக்கிய சொத்துக்களின் பணமாக்குதல் மற்றும் கொள்கையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைப்புக்கு ஒப்புதல் ஆகியவற்றுடன் பணியாளர்களின் செலவினங்களைக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்.

அதில் அவர், 27.07.2022 அன்று, பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபகரமான பொதுத்துறை நிறுவனமாக மாற்ற, பிஎஸ்என்எல்-இன் மறுமலர்ச்சி தொகுப்புக்கு மத்திய அரசு ரூ.1.64 லட்சம் கோடிக்கு ஒப்புதல் அளித்தது. மறுமலர்ச்சி நடவடிக்கைகள் பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதற்கும், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கும், அதன் இருப்புநிலைக் குறிப்பைக் குறைப்பதற்கும், பாரத் பிராட்பேண்ட் நிகாம் லிமிடெட் (பிபிஎன்எல்) நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் அதன் ஃபைபர் நெட்வொர்க்கை அதிகரிப்பதற்கும் புதிய மூலதனத்தை செலுத்துவதில் கவனம் செலுத்துகிறது. என்று அமைச்சர் எழுத்துபூர்வமாக பதில் அளித்திருந்தார்.

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுதான்: மாஸாக வெளியான டைட்டில்!

SCROLL FOR NEXT