செய்திகள்

உக்ரைன்ல இருக்கீங்களா? உடனே வெளியேறுங்க: இந்திய தூதரகம்!

கல்கி டெஸ்க்

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடங்கி, இப்போது தீவிரமடைந்துள்ளது.  

உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக  ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் ராணுவ தள்வாடங்களை கொடுத்து வருகின்றன. இதையடுத்து ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு, உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இனி Play Store-ல் அரசாங்க செயலிகளை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!

அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

SCROLL FOR NEXT