செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கல்கி

தமிழகத்தில் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7129 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது 49.75 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணியிலிருந்து நீர் வெளியேற்றப் படுவதால், அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. எனவே பொதுமக்கள் அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கே.ஆர்.பி அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ள காரணத்தால் தென்பெண்ணை ஆறு செல்ல கூடிய கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பளபளக்கும் சருமம் வேண்டுமா? தேனை இப்படி பயன்படுத்துங்கள்!

பிறர் உங்களை மதிக்க இந்த 9 பழக்கங்களுக்கு குட் பை சொல்லுங்கள்!

விமர்சனம் - ரசவாதி: தலைப்பு ஸ்ட்ராங், திரைக்கதை வீக்!

AC Gas லீக் ஆவதற்கான காரணங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்! 

அன்னபூரணிக்கும் அக்ஷய திரிதியைக்கும் உள்ள தொடர்பை தெரிஞ்சிக்கலாம் வாங்க!

SCROLL FOR NEXT