செய்திகள்

அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஒருவருட இடைவெளிக்குப் பின் சீனா திரும்பியதால் பங்குகள் உயர்வு!

கார்த்திகா வாசுதேவன்

அலிபாபா நிறுவனர் ஜாக் மா சீனாவுக்குத் திரும்பியுள்ளார் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது, இது சீனாவின் தனியார் வணிகங்களின் நிதானமான மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்று தொழில்துறையினரால் பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் தங்கியிருந்த அலிபாபா நிறுவனரின் தாய்நாடு திரும்பல் தற்போது முடிவுக்கு வந்தது.

சீனாவின் சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவரான மா, 2021 இன் பிற்பகுதியில் சீனாவின் பிரதான நிலப்பரப்பை விட்டு வெளியேறினார், அடுத்த சில மாதங்களில் அவர் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்பட்டார்.

ஒரு காலத்தில் நாட்டின் மிகவும் வெளிப்படையாகப் பேசும் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த அவர், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீனாவின் ஒழுங்குமுறை அமைப்பை விமர்சித்த பின்னர், பெய்ஜிங்கால் பரந்த அளவிலான ஒழுங்குமுறை ஒடுக்குமுறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், பொது வெளிச்சத்தில் இருந்து பின்வாங்கினார்.

சீன அதிகாரிகள் சமீபத்திய மாதங்களில் அடக்குமுறையை முடித்துவிட்டதாகவும், தனியார் துறையை ஆதரிப்பதற்கான வழிகளைத் தேடுவதாகவும் கூறினாலும் கூட, சீன தொழில்முனைவோர், வெளிநாட்டில் தங்குவதற்கான மாவின் முடிவை நம்பிக்கையைத் தடுக்கும் காரணியாகக் காண்பதாகத்தான் கூறினர்.

SCMP அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு ஹாங்காங்கில் அலிபாபா பங்குகள் 4% க்கும் அதிகமாக உயர்ந்தன.

ஜாக் மா எப்போது சீனாவுக்குத் திரும்பினார் என்று SCMP அறிக்கை குறிப்பிடவில்லை, ஆனால் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அவர் அலிபாபா மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஆண்ட் குரூப்பின் இல்லமான ஹாங்சோ நகரில் அவர் நிறுவிய பள்ளிக்குச் சென்றதாகக் கூறியது.

ஹாங்காங்கில் சிறிது நேரம் தங்கிய பிறகு அவர் சீனாவுக்குத் திரும்பினார் என்றும் அது கூறியது.

கருத்துக்கான கோரிக்கைகளுக்கு அலிபாபா உடனடியாக பதிலளிக்கவில்லை. யுங்கு எஜுகேசன் பள்ளி, திங்களன்று அதன் WeChat கணக்கில், அலிபாபா அதிபர் மா அதன் பள்ளி வளாகத்திற்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டதாகக் கூறியது.

அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT