ஸ்பெஷல்

21 தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

கல்கி

நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  தமிழ்நாடு மீனவர்கள் 21 பேரை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க நடுக்கடலுக்குச் சென்றனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கு தகவல் கொடுக்க, இலங்கை கடற்படை அங்கு விரைந்து வந்து நாகை மீனவர்களின் 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து அதிலிருந்த 21 பேரை கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே 56 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT