ஸ்பெஷல்

#BREAKING: துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்: மூடுமாறு புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு!

கல்கி

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த பயிற்சியின்போது தவறுதலாக அருகிலிருந்த வீட்டின் புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அச்சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கீரனூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் புகழேந்திக்கு தேவையான மருத்துவ சிகிச்சை தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கி சூடும் மையம் பாதுகாப்பானதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தை மூடுமாறும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆணை பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT