ஸ்பெஷல்

5 பரீட்சை பிட் பேப்பர்கள்; நாமக்கல் ஜெராக்ஸ் கடைகளில் பறிமுதல்! 

கல்கி

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ அளவுக்கு பரீட்சை பிட் பேப்பர்கள் கன்டறியப் ப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்-டூ மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக, பரீட்சை சமயத்தில் கடைபிடிக்கப் பட வேண்டிய நெறிமுறிகளை பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த  அறிக்கையில் குறிப்பிட்டதாவது;

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கன்டறியப்பட்டால் அந்த மாணவர் தேர்வெழுத நிரந்தர தடை விதிக்கப்படும், தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் 

-இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பாடபுத்தகத்தைச் சுருக்கி தயாரிக்கப்பட்ட 5 கிலோ பரீட்சை பிட் பேப்பர்கள் அங்குள்ள ஜெராக்ஸ் கடைகளில் கண்டறியப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT