தினமும் காலை எழுந்ததும் வாய் கொப்பளித்து விட்டு, பின்னர் வாய் கொள்ளும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊர்றி கொள்ளுங்கள். வாயில் அந்த எண்ணெயை சுமார் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இடையிடையே கொப்பளிப்பது போல் செய்யவும். பிறகு எண்ணெயை கீழே துப்பி விட்டு, நன்றாகப் பல் தேய்த்து விட்டு வரவும். இதனால் பல நன்மைகள் உண்டு.
*பல் ஈறுகள் பலப்படும்.
*தோல் பளபளப்பாகும்.
*மூட்டுவலி, இடுப்பு வலி வராது.
* முகத்தில் பருக்கள் இருந்தால் போய் விடும் .
-இப்படி ஆயில் – புல்லிங் செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
– ஆர். பிருந்தா இரமணி, மதுரை.