Drinking water  
ஆரோக்கியம்

இந்த 6 உணவுகளை சாப்பிட்டதும் தப்பித் தவறிக் கூட தண்ணீர் குடித்து விடாதீர்கள்! 

கிரி கணபதி

தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியம் என்றாலும், சில உணவுகளை சாப்பிட்ட பின்னர் உடனடியாக தண்ணீர் குடிப்பது சில சமயங்களில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்தப் பதிவில் உண்மையில் எந்த உணவுகளை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.‌

காரமான உணவுகள்: காரமான உணவுகள் வாயிலும், உணவுக் குழாயிலும் எரிச்சலை ஏற்படுத்தும். இந்நிலையில் அதிகமாக தண்ணீர் குடிப்பது எரிச்சலை மேலும் அதிகரித்து வயிற்றுப்புண், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

கொழுப்பு நிறைந்த உணவுகள்: பிரியாணி, பரோட்டா போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும். எனவே, இவற்றை உண்ட பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பது வயிற்றுப்புண், வாயுப் பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும்.

பழச்சாறுகள்: பழச்சாறுகள் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும், இவற்றில் இயற்கையான சர்க்கரை அதிகம் இருக்கும். எனவே, உணவுக்குப் பிறகு பழச்சாறு குடிப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கும்.

கார்பனேட்டட் பானங்கள்: கார்பனேட்டட் பானங்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு, வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால், உணவுக்குப் பிறகு இந்த பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கவும். இத்துடன் இந்த பானங்களைக் குடித்த பிறகு தண்ணீரையும் அதிகமாக குடிக்க வேண்டாம்.

பால்: பால் குடித்த பின்னர் உடனடியாக தண்ணீர் குடிப்பது பால் செரிமானத்தை பாதிக்கும். இது வயிற்றுப்போக்கு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

சூப்: சூப் பெரும்பாலும் தண்ணீரில் தயாரிக்கப்படுவதால், உணவுக்குப் பிறகு சூப் குடிப்பது வயிற்றில் அதிக திரவத்தை சேர்க்கும். இது செரிமானத்தை மெதுவாக்கி வயிற்றுப்போக்கு, வாயுப் பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும்.

சாப்பிட்ட உடனே அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், இதுபற்றிய தெளிவான அறிவியல் ஆதாரங்கள் மிகக்குறைவு. ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமானது என்பதால், மேலே குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டதும் தண்ணீர் அருந்துவதால் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சிறுகதை: இருட்டை மீறி திமிறிய உருவம்!

SCROLL FOR NEXT