Benefits of Moringa Powder
Benefits of Moringa Powder https://www.herzindagi.com
ஆரோக்கியம்

முருங்கைப் பொடியின் முத்தான பலன்கள்!

எஸ்.விஜயலட்சுமி

மது வீடுகளிலும் அருகில் உள்ள கடைகளிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான் முருங்கைக்கீரை. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய இந்த முருங்கைக் கீரையின் இலைகளில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. வெளிநாடுகளில் மொரிங்கா என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. முருங்கை இலைகளை அரைத்துப் பொடி ஆகவும் எண்ணெய் தயாரித்தும் பயன்படுத்தலாம்.

முருங்கை இலைகளை உருவி நீரில் அலசி நன்றாகக் காய வைத்து பின்பு அதை அரைத்து பொடியாக்கிக்கொண்டால் முருங்கைப் பொடி தயார். தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் முருங்கைப் பொடியை கலந்து குடித்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முருங்கைப் பொடியின் நன்மைகள்:

1. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: முருங்கை இலைகள் வைட்டமின்கள் ஏ, பி காம்ப்ளக்ஸ் & சி, அத்துடன் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகின்றன.

2. அமினோ அமிலங்கள்: இவை உடலுக்குத் தேவையான ஒன்பது அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன. உடலின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

3. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்: க்வெர்செடின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடல் செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கின்றன.

4. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்: நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முருங்கைப் பொடி உதவுகிறது. அவர்களின் குளுக்கோஸையும் இது கட்டுப்படுத்துகிறது.

5. உடல் வீக்கத்தைக் குறைக்கும்: இது உடல் வீக்கத்தை குறைக்கும். ஆஸ்துமா, அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் சில வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற நிலைகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

6. கொலஸ்ட்ராலைக் குறைக்கும்: கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மற்றும் நல்ல கொழுப்பை அதிகரிக்கக்கூடும். இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது மற்றும் இரத்தக் கொழுப்பைக் குறைக்கிறது.

7. உணவில் பரவும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்தல்: சில ஆய்வுகளின்படி, உணவினால் பரவும் நோய்களை ஏற்படுத்தும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் மற்றும் எஸ்கெரிச்சியா கோலி போன்ற பாக்டீரியாக்கள் முருங்கை சாற்றின் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளால் வளராது.

8. மனநிலை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகளுக்கு சிகிச்சை: மோரிங்காவின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்க உதவும். எனவே, இது மல்டிபிள் ஸ்களீரோசிஸ், அல்சைமர் நோய் மற்றும் நரம்பு வலி ஆகியவற்றின் அபாயங்களைக் குறைக்கிறது.

9. இரத்த சோகை மற்றும் அரிவாள் செல் நோய் சிகிச்சை: பாரம்பரியமாக இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கவும் அதைத் தடுக்கவும் மக்கள் முருங்கையைப் பயன்படுத்துகின்றனர். சில ஆய்வுகள், அதிகப்படியான இரும்பை அகற்றி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் அரிவாள் உயிரணு நோயை நிர்வகிக்க உதவும் என்று கூறுகின்றன.

10. புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் முருங்கை: மார்பகம், கல்லீரல், பெருங்குடல் மற்றும் கணையம் போன்ற சில வகையான புற்றுநோய் செல்களை எதிர்த்து முருங்கை போராடுகிறது. இவர்கள் தினமும் ஒரு டம்ளர் நீரில் முருங்கைப் பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கலக்கி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. சருமம் மற்றும் முடியைப் பாதுகாத்தல் மற்றும் ஊட்டமளித்தல்: முருங்கை இலை சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை தேங்காய் எண்ணையுடன் கலந்து பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சியை தூண்டி. பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. பொடுகையும் தடுக்கிறது.

12. ஆஸ்துமா சிகிச்சையில் முருங்கை: மோரிங்கா ஆஸ்துமா அபாயத்தை நிர்வகிக்க அல்லது குறைக்க உதவுகிறது. மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைப்பதன் மூலம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது.

13. சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்: பாரம்பரிய சிகிச்சையில் சிறுநீரகக் கற்கள் வளர்வதை தடுக்க முருங்கையை பயன்படுத்துகிறார்கள். ஆய்வகச் சோதனைகள் முருங்கைச் சாறுகள் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்கும் என்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்தன.

13. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முருங்கை: முருங்கையில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் உள்ளன. மோரிங்காவை எடுத்துக் கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

14. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்: ஆன்டி-ஆக்ஸிடன்ட் பீட்டா கரோட்டின் நிறைந்த முருங்கை, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கண் கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT